என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்ஷரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' | 3 ஹீரோக்கள் இணையும் படம் | பிளாஷ்பேக்: மூன்று திரைப்படங்களில் மட்டுமே நடித்து, முதன்மை குழந்தை நட்சத்திரம் என்ற உச்சம் தொட்ட “பேபி சரோஜா” | பிரதீப்பின் ‛எல்ஐகே' தள்ளிவைப்பு : 'டியூட்' தயாரிப்பாளர் மீது 'எல்ஐகே' தயாரிப்பாளர் குற்றச்சாட்டு | சிம்பு படத்தலைப்பு 'அரசன்': ஹீரோயினாக நடிப்பது சமந்தா? | மீ டு குற்றச்சாட்டுக்கு ஆளான இயக்குனர் டைரக்சனில் நடிப்பது ஏன் ? ; ரீமா கல்லிங்கல் விளக்கம் | காந்தாரா 1000 கோடி வசூலிக்கும் ; நடிகர் ஜெயராம் ஆருடம் |
சின்னத்திரை நடிகையான சமீரா ஷெரீப் தனக்கு வருகின்ற நெகட்டிவான கமெண்டுகளுக்கான இண்ஸ்டாகிராமில் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு தொடர் மற்றும் ஜி தமிழின் றெக்கைகட்டி பறக்குது மனசு தொடர்களில் நடித்து பிரபலமானவர் சமீரா ஷெரீப். இவர் பகல் நிலவு சீரியலில் தன்னுடன் நடித்த சையத் அன்வர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
தற்போது இந்த தம்பதியினருக்கு குழந்தை பிறக்கவுள்ளது. இதனை தொடர்ந்து தனது இண்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். அதற்கு நெகட்டிவான கமெண்டுகளை கொடுத்து வந்த நெட்டிசன்களை, சமீரா பல முறை வார்னிங் செய்துள்ளார்.
இந்நிலையில், தற்போது அவர் கர்ப்பமான வயிறுடன் புகைப்படம் போடுவதை சிலர் குறை கூறியுள்ளார். அதற்கு தக்க பதிலடி கொடுத்துள்ள சமீரா, "இது என்னோட பேபி... என்னோட பம்ப் ... இஷ்டம் இருந்தால் பாருங்கள் இல்லை என்றால் கண்களை மூடிக் கொள்ளுங்கள்." என இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.