மூணு குழந்தைகள் பெத்துக்கணும்... ஜான்வி கூறும் காரணம் | இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? | ‛கட்டா குஸ்தி 2' படம் துவங்கியது | சுதீப்பின் அடுத்த படத் தலைப்பு 'மார்க்' | தெலுங்கில் 100 கோடி வியாபாரத்தில் 'காந்தாரா சாப்டர் 1' | ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மட்டுமே படம் எடுக்க மாட்டேன் : லோகேஷ் கனகராஜ் | நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான் ஒரு நடிகைக்கு அங்கீகாரம்: மிர்னா மேனன் | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை தயாரித்து, இயக்கிய கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: ஹாலிவுட் ரீமேக்கில் நடிக்க மறுத்த பானுமதி | நடப்பு தயாரிப்பாளர் சங்க தேர்தல் : அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு |
விஜய் டிவியில் குழந்தைகளுக்கான புதிய ரியாலிட்டி ஷோவாக தெறி பேபி ஒளிப்பரப்பாக உள்ளது. இதை வீஜே ரக்ஷ்னுடன் இணைந்து மணிமேகலை தொகுத்து வழங்க உள்ளார். தமிழ் தொலைக்காட்சிகளில் சீரியல்களுக்கு அடுத்தபடியாக ரியாலிட்டி ஷோக்கள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இதன் காரணமாகவே சீரியல்களை தாண்டி ரியாலிட்டி ஷோக்களை நடத்துவதிலும் முன்னணி தொலைக்காட்சிகளுக்கு இடையே கடும் போட்டிகள் நிலவி வருகிறது.
ஒரு ரியாலிட்டி ஷோவின் வெற்றிக்கு அதை தொகுத்து வழங்கும் வீஜேக்களின் பங்கு முக்கியமானது. சிவ கார்த்திகேயன், டிடி, தீபக், ரம்யா தொடங்கி பலர் தாங்கள் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்துள்ளனர்.
அந்த வகையில் திருமணத்துக்கு பின் வீஜே வேலைக்கு ஓய்வு கொடுத்த மணிமேகலை, மீண்டும் வீஜே ஆகுமாறு அவர்கள் ரசிகர்கள் நச்சரித்து வந்தனர். அவரும் மீண்டும் வீஜே ஆகும் விருப்பத்தையும், ரக்ஷனுடன் இணைந்து பணிபுரியும் விருப்பத்தையும் வெளிப்படுத்தியிருந்தார். அவரது விருப்பத்திற்கு செவி சாய்த்துள்ள டிவி நிர்வாகம் இந்த கலாட்டாவான காம்போவினை குழந்தைகள் ஷோவில் களமிறக்கியுள்ளது. குழந்தைகளின் சுட்டித் தனத்துடன் தெறிக்க விட வருகிறது இந்த புதிய காம்போ.