மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
சின்னத்திரை பிரபலமான மா கா பா ஆனந்த நல்ல கலைஞன் என்பதை தாண்டி நல்ல மனிதர் என்பதை அவருடன் பழக வாய்ப்பு கிடைத்த அனைவருமே கூறியுள்ளனர். சமீபத்தில் நடைபெற்ற விஜய் டெலிவிஷன் அவார்டு நிகழ்ச்சியில் சிறந்த ஆண் தொகுப்பாளருக்கான விருதை மா கா பா பெற்றார்.
அப்போது விஜய் டிவி சேனல் ஹெட் விருதை வழங்கிவிட்டு, மா கா பா வை பற்றி பேசும் போது, எப்போதுமே தன்னை பிஸியாக வைத்திருக்கும் மா கா பா சரியான நேரத்திற்கு சாப்பிடுவதில்லை. இது அவரது உடல்நலனுக்கு நல்லதல்ல என்ற தகவலை வருத்தத்துடன் பதிவு செய்தார்.
உதவும் குணம் கொண்ட மா கா பா பல சமூக பணிகளில் தன்னை ஈடுபடுத்தி கொண்டு தன்னை எப்போதுமே பிஸியாக வைத்திருக்கிறார். பல தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து சென்னையில் உணவின்றி தவிக்கும் பல ஏழை மக்களுக்கு உணவு வழங்கும் முயற்சியையும் செய்து வருகிறார். சமூகப்பணிகளை செய்வதோடு மட்டுமல்லாமல் அதை தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து தன்னை போலவே பணி செய்யும் மற்றவர்களையும் ஊக்கப்படுத்தி வருகிறார். இதுபோல பல நற்பணிகளை செய்து வரும் மா கா பா வேலை மற்றும் சமூகப்பணிகள் இடையே தன்னை கவனித்துக் கொள்வதில்லை என அவரது நண்பர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.