இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

விறுவிறுப்பான ரோஜா தொடரில், செய்யாத குற்றத்தில் ரோஜாவுக்கு ஜாமீன் கிடைக்காமல் போகிறது. சிறையில் அவருக்கு நிகழவிருக்கும் ஆபத்தை தெரிந்து கொள்ளும் அர்ஜுன் தனது மனைவியை காப்பாற்ற யாருமே எதிர்பாரத காரியம் ஒன்றை செய்கிறார்.
ரோஜா சீரியலில், அனுவை கொலை செய்ய முயற்சித்த வழக்கில் ரோஜா கைது செய்யப்படுகிறார். இந்த வழக்கில் ஆஜராகும் டைகர் மாணிக்கம் ரோஜாவிற்கு ஜாமீன் கிடைக்க கூடாதென வாதிட்டு வெற்றி பெறுகிறார். மேலும், சாக்ஷி மூலம் ரோஜாவை சிறையில் வைத்தே கொலை செய்ய திட்டமிடுகிறார். இதை தெரிந்து கொண்ட அர்ஜுன் தன் மனைவியை காப்பாற்ற டைகர் மாணிக்கத்தின் சட்டையை கோர்ட்டில் வைத்து நீதிபதி முன்பே பிடிக்கிறார். இதனால் அவருக்கு தண்டனையாக ஒரு நாள் சிறைக்காவல் அளிக்கப்படுகிறது. சிறைக்கு செல்லும் அர்ஜூன் அருகில் வேறு சிறையில் தன் மனைவியை எப்படி காப்பாற்ற போகிறார்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களின் ஹார்ட் பீட்டை எகிர வைத்துள்ளது.