மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
விறுவிறுப்பான ரோஜா தொடரில், செய்யாத குற்றத்தில் ரோஜாவுக்கு ஜாமீன் கிடைக்காமல் போகிறது. சிறையில் அவருக்கு நிகழவிருக்கும் ஆபத்தை தெரிந்து கொள்ளும் அர்ஜுன் தனது மனைவியை காப்பாற்ற யாருமே எதிர்பாரத காரியம் ஒன்றை செய்கிறார்.
ரோஜா சீரியலில், அனுவை கொலை செய்ய முயற்சித்த வழக்கில் ரோஜா கைது செய்யப்படுகிறார். இந்த வழக்கில் ஆஜராகும் டைகர் மாணிக்கம் ரோஜாவிற்கு ஜாமீன் கிடைக்க கூடாதென வாதிட்டு வெற்றி பெறுகிறார். மேலும், சாக்ஷி மூலம் ரோஜாவை சிறையில் வைத்தே கொலை செய்ய திட்டமிடுகிறார். இதை தெரிந்து கொண்ட அர்ஜுன் தன் மனைவியை காப்பாற்ற டைகர் மாணிக்கத்தின் சட்டையை கோர்ட்டில் வைத்து நீதிபதி முன்பே பிடிக்கிறார். இதனால் அவருக்கு தண்டனையாக ஒரு நாள் சிறைக்காவல் அளிக்கப்படுகிறது. சிறைக்கு செல்லும் அர்ஜூன் அருகில் வேறு சிறையில் தன் மனைவியை எப்படி காப்பாற்ற போகிறார்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களின் ஹார்ட் பீட்டை எகிர வைத்துள்ளது.