மாஸ் மாஸ்டர்: புதிய பட்டத்துடன் 25வது படத்தில் பாபி சிம்ஹா | கதை சிக்கலில் மாட்டிய ஆஸ்கர் படம் | மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் | பிளாஷ்பேக் : தியாகியாக நடித்தால் மக்கள் பட்டை நாமம் போடுவார்கள் என சொன்ன சிவாஜி | பிளாஷ்பேக் : தவறான சிகிச்சையால் மரணம் அடைந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | 75 வயது பவுனுதாயி ஆக ராதிகா சரத்குமார்: பட ரிலீசுக்கு முன்பே வியாபாரம் ஆன 'தாய்கிழவி' | 2025 முடிவும் இப்படி.. 2026 தொடக்கமும் அப்படி.. | திருமணம் செய்யாதது ஏன்? மாஸ்டர் மகேந்திரன் | மலேசியாவில் 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழா: விஜய் குடும்பத்தினர் பங்கேற்பார்களா? | டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா |

'புன்னகை பூவே' சீரியலில் கலைவாணி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் சைத்ரா சக்காரி. முன்னதாக 2019ம் ஆண்டு ஒளிபரப்பான 'தமிழ்ச்செல்வி' தொடரின் மூலம் தமிழ் சின்னத்திரைக்கு அறிமுகமாகியிருந்த இவர், கன்னடா, தெலுங்கு மொழிகளிலும் நடித்திருக்கிறார். தற்போது கலைவாணி கதாபாத்திரத்தின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்த சைத்ரா, திடீரென இந்த சீரியலை விட்டு விலகியிருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், சைத்ரா கன்னடத்தில் புதிதாக ஒளிபரப்பாக உள்ள 'சாரதே' என்கிற தொடரில் ஹீரோயினாக நடிக்க கமிட்டாகியுள்ளார். இது தமிழில் வெளியான 'செல்லம்மா' தொடரின் அதிகாரப்பூர்வ ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. சாரதே தொடர் தனக்கு அதிக அங்கீகாரத்தை கொடுக்கும் என்பதால் தான் அவர் புன்னகை பூவே சீரியலை விட்டு விலகியிருக்கிறார். இனி புன்னகை பூவே தொடரில் அவர் நடித்து வந்த கதபாத்திரத்தில் ஐஸ்வர்யா என்ற நடிகை தொடர்ந்து நடிக்க உள்ளார்.