32 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள படத்தில் நடிக்கும் மதுபாலா | எம்புரான் பட ரிலீசுக்கு முன்னதாக லூசிபர் முதல் பாகத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய திட்டம் | கேரள மாணவன் தற்கொலை : சமந்தாவின் இரங்கலும் கண்டனமும் | பறந்து போ : ரோட்டர் டேம் திரைப்பட விழாவிற்கு தேர்வு | இட்லி கடை : அருண் விஜய்யின் முதல் பார்வை வெளியானது | காதலியை மணந்தார் கிஷன் தாஸ் | மணிரத்னம், லோகேஷ் படத்தில் நடிக்க ஆசை : நாக சைதன்யா பேட்டி | பிளாஷ்பேக் : அன்றைக்கே 40 லட்சம் வசூலித்த 'மங்கம்மா சபதம்' | நடிகர் சங்க புதிய கட்டிடம் திறப்பது எப்போது? - நிர்வாகிகள் ஆலோசனை | புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் |
பிரபல சின்னத்திரை நடிகரான நேத்ரன் தமிழ் தொலைக்காட்சி சீரியல்களில் கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வந்தார். அண்மையில் புற்றுநோய் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த அவர் சில தினங்களுக்கு முன் உயிரிழந்தார். அவரது இறப்பு சின்னத்திரை கலைஞர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. நேத்ரனுடன் நடித்த நண்பர்களும், சில நடிகர்களும் நேத்ரனின் நல்ல குணத்தை பகிர்ந்து தங்கள் வருத்தத்தை பதிவு செய்து வருகின்றனர்.
இதற்கிடையில் நேத்ரனின் மகள் அபிநயா மிக சமீபத்தில் தான் சீரியலில் நடிக்க தொடங்கியிருந்தார். அவர் தற்போது தனது அப்பாவின் பழைய புகைப்படங்களை ஷேர் செய்து எமோஷ்னலான பதிவினை வெளியிட்டுள்ளார். அதை பார்த்து பலரும் நேத்ரனை ஹீரோவாக பார்க்க தவறவிட்டதை துர்பாக்கியம் என கூறி வருந்தி வருகின்றனர்.