பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் | நான்கு நாட்களில் 300 கோடி வசூலைக் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' | ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! |
பிரபல சின்னத்திரை நடிகரான நேத்ரன் தமிழ் தொலைக்காட்சி சீரியல்களில் கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வந்தார். அண்மையில் புற்றுநோய் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த அவர் சில தினங்களுக்கு முன் உயிரிழந்தார். அவரது இறப்பு சின்னத்திரை கலைஞர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. நேத்ரனுடன் நடித்த நண்பர்களும், சில நடிகர்களும் நேத்ரனின் நல்ல குணத்தை பகிர்ந்து தங்கள் வருத்தத்தை பதிவு செய்து வருகின்றனர்.
இதற்கிடையில் நேத்ரனின் மகள் அபிநயா மிக சமீபத்தில் தான் சீரியலில் நடிக்க தொடங்கியிருந்தார். அவர் தற்போது தனது அப்பாவின் பழைய புகைப்படங்களை ஷேர் செய்து எமோஷ்னலான பதிவினை வெளியிட்டுள்ளார். அதை பார்த்து பலரும் நேத்ரனை ஹீரோவாக பார்க்க தவறவிட்டதை துர்பாக்கியம் என கூறி வருந்தி வருகின்றனர்.