'கேம் சேஞ்ஜர்' அனுபவம் ஒரு 'பயங்கரம்' - விலகிய எடிட்டர் பேச்சு | பிளாஷ்பேக்: மலைக்க வைக்கும் 50வது ஆண்டில் “மயங்குகிறாள் ஒரு மாது” | ஜூன் மாதத்தில் ‛சர்தார் 2' படப்பிடிப்பு முடியும் ; மாளவிகா மோகனன் | காதலிக்க நேரமில்லை, தில், ராட்சசன் - ஞாயிறு திரைப்படங்கள் | நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் |
கலைஞர் டி.வி.யில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த 'கண்ணெதிரே தோன்றினாள்' தொடர் இன்றுடன் முடிவடைகிறது. இதை தொடர்ந்து வருகிற திங்கள் முதல் (4ம்தேதி) 'பவித்ரா' என்கிற புதிய தொடர் ஒளிபரப்பாக இருக்கிறது. இரவு 7 மணி முதல் 9 மணி வரை 2 மணிநேரம் சிறப்பு எபிசோட்டுடன் இந்த தொடர் ஆரம்பமாகிறது.
சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு சென்ற அனிதா சம்பத் மீண்டும் சின்னத்திரைக்கே திரும்பி வந்து நடிக்கும் முதல் தொடர். அவரது ஜோடியாக பாடலாசிரியர் சினேகன் நடிக்கிறார். பிரபல தொழிலதிபர் ரமா தேவிக்கு கிருஷ்ணா, பவானி, ஜோதி ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இதில் கிருஷ்ணா, சரிகாவை மணக்கிறார். சரிகாவின் அண்ணன் வேணுவுக்கு பவானியை மணம் முடித்து கொடுக்க ரமா தேவி விரும்பும் நிலையில், தனது வீட்டாரை எதிர்த்து தான் காதலித்த டிரைவர் பாரதியை, பவானி திருமணம் செய்து கொள்கிறார். அதன்பிறகு குடும்பத்திலும், காதலிலும் என்ன நடக்கிறது. ஜோதியின் நிலை என்ன என்பது தான் தொடரின் கதை.