ஜூலை 25ல் ‛அவதார் 3' டிரைலர் | இசை நிகழ்ச்சி! கெனிஷா உடன் இலங்கை சென்ற ரவி மோகன் | ‛பராசக்தி' படத்தில் இணைந்த ராணா | வார் 2 படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு | மாரி செல்வராஜின் 'பைசன்' பிஸினஸ் எப்படி? | இறுதிக்கட்டத்தை எட்டிய ஜேசன் சஞ்சய், சந்தீப் கிஷன் படம் | இலங்கை தமிழ் படத்தில் டி.ஜே.பானு | புராண அனிமேஷன் படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | வசூலை குவிக்க அடுத்து வருகிறது 'ட்ரான்: ஏரிஸ்' | அனிருத் இசை நிகழ்ச்சி திடீர் ரத்து |
சின்னத்திரை நடிகை பவித்ரா ஜனனி விஜய் தொலைக்காட்சி சீரியல்களில் அதிகமாக நடித்திருக்கிறார். ஈரமான ரோஜாவே, தென்றல் வந்து என்னை தொடும் ஆகிய தொடர்களின் மூலம் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்த பவித்ராவுக்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்தனர். அதே வரவேற்பும் ஆதரவும் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதும் இருந்தது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சீரியல் நடிகைகள் பலர் அதன்பின் சினிமாவிற்கு சென்று விடுவார்கள். அதேபோல பவித்ராவும் சினிமாவில் என்ட்ரி கொடுப்பார் என பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில், அவர் ரஞ்சனி தொடரின் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று தர்ஷனா, ஷ்யமந்தா, அஸ்வின், சந்தோஷ் ஆகியோருடம் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலானது.
இதனால், அவர் ரஞ்சனி தொடரில் எண்ட்ரி கொடுக்கிறாரா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். ஆனால், பிக்பாஸிலிருந்து வெளியே வந்த பவித்ரா இதுவரை எந்தவொரு ப்ராஜெக்டிலும் கமிட்டானதாக தெரியவில்லை. அதேசமயம் பவித்ராவின் தோழி ஷ்யாமந்தா கிரண் ரஞ்சனி தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அவரை காண பவித்ரா அங்கு சென்ற போது தான் சக நடிகர்களும் புகைப்படம் எடுத்துள்ளனர். தற்போது இந்த புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்களோ பவித்ராவை மீண்டும் சின்னத்திரையிலேயே நடிக்க சொல்லி ரிக்வஸ்ட் வைத்து வருகின்றனர்.