பிளாஷ்பேக்: சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட முதல் தென்னிந்திய படம் | ரஜினியின் 173வது படத்தை இயக்கப் போவது யார்? | மீண்டும் சீரியஸ் கதையில் வடிவேலு? | நிஜத்திலும், சினிமாவிலும் அம்மா ஆன மந்த்ரா | அஜித்தின் 65வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | கூலி படத்தில் பஹத் பாசிலுக்கு உருவாக்கப்பட்ட வேடத்தில் சவுபின் ஷாகிர் | எந்த கூட்டணி அமையும்? யாராச்சும் உறுதிப்படுத்துங்கப்பா | சூப்பர் குட் பிலிம்ஸ் 100வது படத்தில் நடிப்பது யார்? | 'தண்டட்டி' இயக்குனர் படத்தில் கவின் | அந்த மொட்டை யார் தெரியுமா? : கல்யாணி பகிர்ந்த சுவாரசிய போட்டோ |
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் முதல் சீசனுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில் ஸ்டாலின் முத்து, நிரோஷா, ராஜ்குமார் மனோகரன், வெங்கட் ரெங்கநாதன், வீஜே கதிர், சரண்யா துராடி, ஷாலினி, ஹேமா ராஜ்குமார் என பெரிய பட்டாளமே நடித்து வருகின்றனர்.
இந்நிலையில், ராஜி என்கிற முக்கிய கதபாத்திரத்தில் நடித்து வரும் ஷாலினி சீரியலை விட்டு விலக இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வந்தது. இதனால் ரசிகர்களும் குழப்பமடைந்தனர்.
இதுகுறித்து தற்போது விளக்கமளித்துள்ள ஷாலினி, 'நான் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடரிலிருந்து விலகப்போவதாக செய்திகள் வெளியாகி வருகிறது. அது முற்றிலும் பொய். எதற்காக இப்படி வதந்திகள் பரப்புகிறார்கள் என்று தெரியவில்லை.நான் உங்கள் ராஜியாக தொடர்வேன். வதந்திகளை பரப்பாதீர்கள்' என பதிவிட்டுள்ளார்.