பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் முதல் சீசனுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில் ஸ்டாலின் முத்து, நிரோஷா, ராஜ்குமார் மனோகரன், வெங்கட் ரெங்கநாதன், வீஜே கதிர், சரண்யா துராடி, ஷாலினி, ஹேமா ராஜ்குமார் என பெரிய பட்டாளமே நடித்து வருகின்றனர்.
இந்நிலையில், ராஜி என்கிற முக்கிய கதபாத்திரத்தில் நடித்து வரும் ஷாலினி சீரியலை விட்டு விலக இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வந்தது. இதனால் ரசிகர்களும் குழப்பமடைந்தனர்.
இதுகுறித்து தற்போது விளக்கமளித்துள்ள ஷாலினி, 'நான் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடரிலிருந்து விலகப்போவதாக செய்திகள் வெளியாகி வருகிறது. அது முற்றிலும் பொய். எதற்காக இப்படி வதந்திகள் பரப்புகிறார்கள் என்று தெரியவில்லை.நான் உங்கள் ராஜியாக தொடர்வேன். வதந்திகளை பரப்பாதீர்கள்' என பதிவிட்டுள்ளார்.