குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' | குழந்தைகளின் உளவியலை பேசும் 'நாங்கள்' | சிங்கப்பூர் பள்ளியில் படிக்கும் பவன் கல்யாண் மகன் தீ விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதி | பிளாஷ்பேக்: கடைசி வரை ஹீரோயின் ஆக முடியாத பிருந்தா பரேக் | பிளாஷ்பேக்: வண்ணத்தில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட சக்ர தாரி |
சின்னத்திரை நடிகையான திவ்யா கணேஷ் தற்போது பாக்கியலெட்சுமி தொடரில் ஜெனிபர் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக விகாஸ் சம்பத் நடித்து வருகிறார். சீரியலில் ஜோடியாக திரியும் இவர்கள் இருவரும் நிஜத்திலும் காதலித்து வருவதாக கடந்த சில நாட்களாக வதந்திகள் பரவி வந்தது. இந்நிலையில், திவ்யா கணேஷ் இது முற்றிலும் பொய்யான செய்தி என்று கூறியதோடு, 'எங்கள் இருவருக்கும் குடும்பங்கள் இருக்கிறது. எங்கள் குடும்பங்களை மனதில் வைத்துக்கொண்டு இவ்வாறான பொய் செய்திகளை பரப்புவதை முதலில் நிறுத்துங்கள். எனது கடந்த கால வாழ்க்கை குறித்தும் பேசாதீர்கள். அதை நான் மறக்கவே நினைக்கிறேன். இதை எனது வேண்டுகோளாக நினைத்து ரீச்சிற்காகவும், வியூஸ்காகவும் இது போன்ற போலியான செய்திகளை பரப்புவதை நிறுத்துங்கள்' என வேண்டுகோள் வைத்துள்ளார்.