300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
தமிழில் ஒளிபரப்பான அண்ணாமலை, கோலங்கள், மந்திரவாசல் உள்ளிட்ட சில தொடர்களில் நடித்து பிரபலமானவர் மஞ்சரி. மஞ்சரிக்கு தமிழ் சின்னத்திரை நேயர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்த போதிலும் அவர் தொடர்ந்து சீரியலில் நடிக்கவில்லை. அதற்கு காரணம் மஞ்சரி சிங்கப்பூரில் வசித்து வந்தார். சீரியல் ஷூட்டிங் பொழுதுகளில் மட்டும் தமிழகம் வந்து நடித்துக் கொண்டிருந்தார்.
இந்நிலையில், நீண்ட நாட்களுக்கு பிறகு ஊடகத்தில் பேட்டி கொடுத்துள்ள அவர், மொட்டத்தலையுடன் காட்சியளிக்கிறார். இதற்கு காரணம் என்ன? என்று அவரிடம் கேட்ட போது, 'சிங்கப்பூரில் குழந்தைகள் கேன்சர் சொசைட்டி உள்ளது. அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் போது தலைமுடி உதிர்ந்துவிடும். அவர்களுக்கு நிறையபேர் முடியை தானமாக கொடுப்பார்கள். நானும் வருடத்திற்கு ஒரு முறை எனது முடியை அந்த குழந்தைகளுக்கு டொனேஷன் செய்து வருகிறேன்' என்று கூறியுள்ளார். மஞ்சரியின் இந்த செயலை தற்போது பலரும் வாழ்த்தி வருகின்றனர்.