25வது நாளில் அடியெடுத்து வைத்த 'டூரிஸ்ட் பேமிலி' | ஹீரோக்களின் உதவியாளர்கள் கதை கேட்பதை முதலில் நிறுத்த வேண்டும் ; ஆர்கே செல்வமணி காட்டம் | தெலுங்கு படத்தில் சூப்பர் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடிக்கும் உபேந்திரா | எனக்குள் புதிய விடியலை திறந்து விட்ட ஓஷோவின் பேச்சு ; மோகன்லால் | என் விளக்கத்தை அக்ஷய் குமார் படித்தால் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும் ; படத்திலிருந்து விலகிய நடிகர் பதில் | 'அஞ்சலி' படம் பார்த்து அழுத சிலம்பரசன் | பிரபாஸ் அமைதியானவர் அல்ல, கலகலப்பானவர்! -மாளவிகா மோகனன் | உருவ கேலி செய்தவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி! | திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' |
சின்னத்திரை தொகுப்பாளினியான மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியை விட்டு விலகியிருந்தார். இதனை தொடர்ந்து அவர் வெளியிட்ட வீடியோ தொலைக்காட்சி, சோஷியல் மீடியா என அனைத்திலும் புயலை கிளப்பியது. சின்னத்திரை பிரபலங்கள் தாண்டி, அரசியல் விமர்சகர்கள் கூட இந்த பஞ்சாயத்தை கையில் எடுத்து மணிமேகலை சரியா? பிரியங்கா சரியா? என தீர்ப்பு சொல்ல ஆரம்பித்தனர்.
இதற்கிடையில் ஆரம்பத்தில் மணிமேகலைக்கு சப்போர்ட் செய்த சிலரே கூட திடீரென அந்தர் பல்டி அடித்து மாற்றி பேசியிருந்தனர். பிரபல நடிகை ஷகிலா, மணிமேகலையை ஓடிப்போனவள் என்று தேவையற்ற விமர்சனத்தை வைத்திருந்தார். இந்நிலையில், இதற்கு தற்போது வீடியோ ஒன்றில் பதிலடி கொடுத்துள்ள மணிமேகலை, கூட இருக்கிறவர்களை தான் நம்பவே கூடாது என்று கலாய்க்கும் விதமாக பேசியிருக்கிறார்.
அவரது வீடியோவில் , 'நான் ஓடிப்போனது எங்க அம்மாவுக்கே பிரச்னை இல்லை. ஆனால், சிலர் வித்தியாசமா கூவுறாங்க' என்று ஷகிலாவை தாக்கி பேசியுள்ளார். மேலும், 'சிலர் வாட்சப்பில் ஒரு மாதிரி பேசிவிட்டு, வீடியோவில் வேறு மாதிரி பேசுகிறார்கள். மணி (மணிமேகலை) முக்கியம் இல்லை மணி (பணம் ) தான் முக்கியம் என்று நினைக்கிறார்கள். அந்த சொம்புகளுக்கெல்லாம் இனி என்ன மரியாதை?' என்று ஒரே வீடியோவில் அனைவரையும் லெப்ட் ரைட் வாங்கி பேசியிருக்கிறார்.