அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
குக் வித் கோமாளி சீசன் 5-ல் தொகுப்பாளராக களமிறங்கிய மணிமேகலை நிகழ்ச்சியை விட்டு அதிரடியாக விலகியுள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள விளக்கத்தில் காசு பணத்தை காட்டிலும் சுயமரியாதை முக்கியம் என கூறியுள்ளார். அவரது பதிவில், 'குக் வித் கோமாளி நிகழ்ச்சி தொடங்கிய நாள் முதலே நான் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகிறேன். காசு, பணம், புகழை விட சுயமரியாதை தான் மிகவும் முக்கியம். எனவே குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகுகிறேன். இந்நிகழ்ச்சி மற்றொரு பெண் தொகுப்பாளினியால் முற்றிலுமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
குக்காக வந்த ஒருவர் தான் குக் என்பதை மறந்துவிட்டு என்னுடைய ஆங்கரிங் வேலைகளில் தலையிட்டு வருகிறார். நிறைய அடக்குமுறைகளால் இந்நிகழ்ச்சி அதன் அசல் தன்மையை இழந்துவிட்டது. முன்பு நான் பார்த்து, ரசித்து மகிழ்ச்சியாக இருந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி இதுவல்ல' என பல தகவல்களை கூறியிருக்கிறார். சீசன் 1 முதல் தற்போதுவரை குக் வித் கோமாளியின் அனைத்து சீசன்களிலும் பங்கேற்றிருந்த மணிமேகலை இப்படி அதிரடியாக விலகியிருப்பதால் ரசிகர்களும் சோகமடைந்துள்ளனர்.