300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
சின்னத்திரையில் அனைத்து தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் வரும் கலைஞர்களை கவுரவிக்கும் வகையில் சின்னத்திரை விருது நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. சின்னத்திரை 2023ம் ஆண்டிற்கான விருது விழா அண்மையில் தான் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதில் சிறந்த தொலைக்காட்சி தொடருக்கான விருதை எதிர்நீச்சல் தொடர் பெற்றுள்ளது.
இதனையடுத்து விருதை பெற்றுக்கொண்ட இயக்குநர் திருச்செல்வம், 'எல்லோருடைய வாழ்க்கையில் இருந்து எடுக்கப்பட்டது தான் எதிர்நீச்சல். கோலங்கள் தொடருக்கு பின் எனக்கு இந்த வாய்ப்பையும், சுதந்திரத்தையும் கொடுத்த தொலைக்காட்சிக்கு நன்றி. இந்த தொடர் இவ்வளவு பெரிய இடத்தை பிடிக்க காரணம் இந்த தொடருக்கு வசனம் எழுதிய ஸ்ரீவித்யா தான்' என கூறினார். அதன்பிறகு தொகுப்பாளர் அர்ச்சனா எதிர்நீச்சல் 2 வருமா? என கேட்க, அதற்கு பதிலளித்த திருச்செல்வம் 'எதிர்நீச்சல் எப்பொழுதும் வரும், எப்பொழுதும் இருக்கும்' என்று அதிரடியாக பதிலளித்துள்ளார்.