மூணு குழந்தைகள் பெத்துக்கணும்... ஜான்வி கூறும் காரணம் | இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? | ‛கட்டா குஸ்தி 2' படம் துவங்கியது | சுதீப்பின் அடுத்த படத் தலைப்பு 'மார்க்' | தெலுங்கில் 100 கோடி வியாபாரத்தில் 'காந்தாரா சாப்டர் 1' | ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மட்டுமே படம் எடுக்க மாட்டேன் : லோகேஷ் கனகராஜ் | நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான் ஒரு நடிகைக்கு அங்கீகாரம்: மிர்னா மேனன் | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை தயாரித்து, இயக்கிய கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: ஹாலிவுட் ரீமேக்கில் நடிக்க மறுத்த பானுமதி | நடப்பு தயாரிப்பாளர் சங்க தேர்தல் : அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு |
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூலம் புகழ் பெற்ற நடிகைகளில் ஒருவர் வீஜே தீபிகா. தமிழக இளைஞர்கள் பலரும் இவருக்கு ரசிகர்களாக உள்ளனர். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் தீபிகா, அண்மையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த போது கூறிய விஷயம் சர்ச்சையாக மாறியுள்ளது.
அதில், 'நான் பீரியட்ஸ் நாட்களில் கூட கோவிலுக்கு செல்வேன். பூஜை அறைக்கு செல்வேன். சாமி கும்பிடுவேன். என்னை பொருத்தவரை அவர் என்னுடைய சாமி, என்னுடைய அய்யனார். எனக்கு உடம்பு சரியில்லை அவ்வளவுதான். அவர் என்னை ஏற்றுக்கொள்வார். என்னை அவர் ஒருபோதும் ஒதுக்கமாட்டார். கடவுளே ஒதுக்காதபோது என்னை ஒதுக்க நீ யார்?. நான் என்ன செய்ய வேண்டும், செய்யக்கூடாது என்று சொல்ல உனக்கு உரிமையில்லை' என்று கூறியுள்ளார். இவரது இந்த பேட்டிக்கு சிலர் பாசிட்டிவாக வாழ்த்துகள் கூறினாலும் பலர் கடவுள் விஷயத்தில் இப்படி விளையாடக்கூடாது என அட்வைஸ் செய்து எச்சரித்து வருகின்றனர்.