கர்நாடக முதல்வரை சந்தித்த ராம்சரண் | ஜூனியர் என்டிஆர், பிரசாந்த் நீல் படத்தில் ருக்மணி வசந்த் : ரகசியம் உடைத்த மதராஸி தயாரிப்பாளர் | மருமகனுக்காக படம் தயாரிக்கும் விஜய் ஆண்டனி | ரஜினியே ரத்தத்தை நம்பி தான் படம் எடுக்கிறார் : ராதாரவி பேச்சு | இந்து தர்மத்தை சினிமாவில் சொல்வதை நினைத்து பெருமைப்படுகிறேன் : ‛ஹனுமன்' ஹீரோ | பார்வையாளர்களின் பதிலை மட்டுமே மதிக்கிறேன் : பல்லவி ஜோஷி | 100 மில்லியன் கடந்த 'முத்த மழை' மேடைப் பாடல் | 'மிராய்' டிரைலரைப் பார்த்து வாழ்த்திய ரஜினிகாந்த் | அல்லு அர்ஜுன், பவன் கல்யாண் 'மனஸ்தாபம்' முடிவுக்கு வந்ததா ? | 'கைதி 2' படத்திற்கு இசை அனிருத்? |
விஜய் சேதுபதி நடிப்பில் அண்மையில் வெளியாகி திரை ரசிகர்களின் வரவேற்பை பெற்ற திரைப்படம் மகாராஜா. இதில், ஜோதி கதாபாத்திரத்தில் நடித்திருந்த சஞ்சனா நமிதாஸிற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. முதல் படத்திலேயே அருமையாக நடித்துவிட்டதாக பலரும் வாழ்த்தி வருகின்றனர். ஆனால், சஞ்சனாவுக்கு கேமரா புதிதல்ல. ஏற்கனவே கவுதம் கார்த்திக் நடிப்பில் வெளியான 1947 என்கிற படத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் சஞ்சனா 6 மாத குழந்தையாக இருக்கும் போதே மெட்டி ஒலி சீரியலில் நடித்திருக்கிறார். அதன்பின் தொடர்ச்சியாக குழந்தை நட்சத்திரமாக சில சீரியல்களில் நடித்துள்ள சஞ்சனா, கண்ணான கண்ணே, செங்கலம் உள்ளிட்ட சில தொடர்களிலும் நடித்துள்ளார். தற்போது கல்லூரி படிப்பை முடித்துள்ள சஞ்சனா தொடர்ந்து சினிமாவில் நடிக்க வேண்டும் என தனது விருப்பத்தை பேட்டிகளில் தெரிவித்து வருகிறார்.