மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
விஜய் டிவியில் அதிக எதிர்பார்ப்புடன் தொடங்கபட்ட சீரியல், கிழக்கு வாசல். இதில் எஸ்.ஏ.சந்திரசேகர், வெங்கட், ரேஷ்மா, அருண்குமார் ராஜன், அஸ்வினி என ஒரு நடிகர் பட்டாளமே நடித்து வந்தனர். சீரியலில் திரைக்கதை நன்றாக இருந்தாலும் சரியான டைம் ஸ்லாட் கிடைக்காததால் டிஆர்பியில் முன்னேற்றமில்லாமல் தவித்து வந்தது.
இந்நிலையில் இந்த தொடரை முடித்து வைக்க சீரியல் குழுவினர் முடிவெடுத்துள்ளனர். இதற்காக கிளைமாக்ஸ் காட்சியும் அண்மையில் படமாக்கியுள்ளனர். ஆனால், சீரியலின் கதாநாயகி வராமலேயே அந்த காட்சியை படமாக்கி சீரியலை முடித்து வைத்துள்ளனர். இதுகுறித்து தற்போது பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள ரேஷ்மா, ஒரு மாதத்திற்கும் மேலாக தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும், எனவே தான் ஷூட்டிங்கில் கலந்து கொள்ள முடியவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும், இந்த சீரியலில் நடித்த அனுபவத்தை என் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.