காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
சின்னத்திரை நடிகர் சங்க பொதுக்குழு அண்மையில் நடந்து முடிந்தது. இதில், முன்னதாக பொறுப்பிலிருந்த ரவி வர்மா மற்றும் அவரது குழுவிலிருந்த உறுப்பினர்கள் பணமோசடி செய்துவிட்டதாக எழுந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாக இருந்தது. இந்நிலையில், ரவிவர்மா மீது நடிகை ஒருவர் மற்றொரு புகாரை கொடுத்துள்ளார்.
அதாவது ரவிவர்மா சின்னத்திரை நடிகர் சங்க தலைவராக இருந்தபோது அந்த நடிகை அவரிடம் வாய்ப்பு கேட்டு அணுகியதாகவும் அதற்கு ரவிவர்மா தான் சொல்வதை செய்தால் மட்டுமே வாய்ப்பு கிடைக்கும் என்று சர்ச்சைக்குரிய வகையில் அந்த நடிகையிடம் நடந்து கொண்டதாகவும் கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோ பொதுக்குழுவில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து நிதி மோசடியோடு சேர்த்து ரவிவர்மா மீதான இந்த புகார் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக சின்னத்திரை வட்டாரங்களில் செய்திகள் பரவி வருகிறது.