குட் பேட் அக்லி : ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு இளையராஜா நோட்டீஸ் | 4கே தொழில்நுட்பத்தில் மீண்டும் வெளியாகும் 'கேப்டன் பிரபாகரன்' | தூசி தட்டப்படும் 'இடி முழக்கம்' | எந்த படப்பிடிப்புக்கும் செல்ல மாட்டோம் : அவுட்டோர் யூனிட் யூனியன் அறிவிப்பு | 'கேங்கர்ஸ்' படத்துக்கு வரும் புது சிக்கல் | பிளாஷ்பேக் : ஒரே வருடத்தில் 18 படங்களில் நடித்த விஜயகாந்த் | பிளாஷ்பேக் : மூன்று வேடங்களில் நடித்த ஹோன்னப்ப பாகவதர் | அஜித்தின் அடுத்த படம்: சஸ்பென்ஸாக இருக்கும் நிறுவனம் | அஜித்தின் 'டாப் வசூல்' படமாக மாறுமா 'குட் பேட் அக்லி' | நடிகர் நானிக்கு ஓடிடி-யில் அடித்த ஜாக்பாட் |
சின்னத்திரை சீரியல் வரலாற்றில் முடிசூடா ராணியாக கொடிக்கட்டி பறந்தவர் என்றால் அது நடிகை ராதிகா தான். அவரது ராடன் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் பல சீரியல்களை தயாரித்து ஹிட் கொடுத்துள்ளார். தற்போது கிழக்கு வாசல், தாயம்மா என்கிற இரண்டு தொடர்களை தயாரித்து வருகிறார். இதில் கிழக்கு வாசல் தொடர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. தாயம்மா தொடர் பொதிகை சேனலில் ஒளிபரப்பாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பல நாட்களாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தாயம்மா தொடரை ஒளிபரப்பும் உரிமையை கலைஞர் டிவி வாங்கியுள்ளதாக சின்னத்திரை வட்டாரங்களில் செய்திகள் வெளியாகி வருகிறது. தாயம்மா தொடர் கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும் நேரம் மிகவிரைவில் அறிவிக்கப்பட உள்ளது.