ஓடிடி.,யிலும் தோல்வியடைந்த யுவன் ஷங்கர் ராஜா படம் | ஓடிடி-யில் வெளியாகும் வரலக்ஷ்மி சரத்குமாரின் திரில்லர் படம் | கூலி படத்தில் ரஜினி உடன் நடித்தது ஸ்பெஷலான அனுபவம் : பூஜா ஹெக்டே | அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? : ரவி மோகன் கொடுத்த பதில் | விஜய் சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தே? | பாங்காக் பறந்த இட்லி கடை படக்குழு | 24 லட்சம் வாடகையில் புதிய அபார்ட்மென்ட்டுக்கு குடிபெயர்ந்த ஷாருக்கான் | உடை மாற்ற உதவிக்கு வருவேன் என அடம்பிடித்த போதை நடிகர் : மலையாள நடிகை அதிர்ச்சி தகவல் | ஜெய ஜெய ஜெய ஜெய ஹே ஹிந்தி ரீமேக்கை அமீர்கான் கைவிட்டது ஏன்? : நடிகர் புது தகவல் | மீரா ஜாஸ்மின் பெயர் என் காதுகளில் ஒலிக்காத நாளே இல்லை ; சிலாகித்த நயன்தாரா |
சினிமா தயாரிப்பாளரான ரவீந்தர் சந்திரசேகர், சின்னத்திரை நடிகை மஹாலெட்சுமியை திருமணம் செய்து கொண்டார். ரவீந்தர் பண மோசடி வழக்கில் கைதாகி சிறைக்கு சென்ற போது மஹாலெட்சுமி ஜாலியாக சீரியலில் நடித்துக்கொண்டு போட்டோஷூட் வெளியிட்டு வருவதாக பலரும் அவரை குற்றம் சுமத்தி வந்தனர். இந்நிலையில் சிறையிலிருந்து ஜாமினில் விடுதலையாகியுள்ள ரவீந்தருடன் மஹாலெட்சுமி போட்டோ வெளியிட்டு, 'எனது முகத்தில் சிரிப்பை வரவழைக்க நீங்கள் தவறியதில்லை. காதலுக்கு காரணம் ஒருவரது நம்பிக்கை தான். இங்கு என்னை விட நம்பிக்கையே உன்னை காதலிக்கிறது. அதே காதலை என் மீது பொழிந்து என்னை முன்பு போல் காப்பாற்றுவாயாக. நான் உன்னை மிகவும் காதலிக்கிறேன் அம்மு' என்று பதிவிட்டுள்ளார்.
ரவீந்தர் - மஹாலெட்சுமிக்கு இடையே இருக்கும் இந்த புரிதலையும், காதலையும் பலரும் வாழ்த்தி பதிவிட்டு வருகின்றனர்.