அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? | திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த பவர் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் | அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் | வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | அல்லு அர்ஜுன், அட்லி படம் : கதாநாயகிகள் வாய்ப்பு யாருக்கு? | ஒரு பாட்டாவது வைத்திருக்கலாம்…. த்ரிஷா, சிம்ரன் ரசிகர்கள் வருத்தம் | 2025ல் இரண்டாவது 50 நாள் படம் 'டிராகன்' |
பிரபல நடிகர் மாரிமுத்து மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இதனையொட்டி வெள்ளித்திரையும் சின்னத்திரையும் சோகத்தில் மூழ்கியுள்ளது. இந்நிலையில், அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் ‛வானத்தைப் போல' சீரியல் குழுவினர் நேற்று ஷூட்டிங் தொடங்கும் முன் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தியுள்ளனர். மாரிமுத்துவின் ஆன்மா சாந்தியடையவும் அவரது குடும்பத்தாருக்கு பலத்தை தரவும் வேண்டி வானத்தைப் போல தொடரின் ஹீரோ ஸ்ரீகுமார் தனது செட்டில் இருக்கும் சக நடிகர்களையும், வேலை செய்பவர்களையும் ஒரு நிமிடம் மவுனம் காக்குமாறும் கேட்டுக்கொள்ள அனைவரும் மறைந்த நடிகர் மாரிமுத்துவுக்காக அஞ்சலி செலுத்தியுள்ளனர்.