ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

சின்னத்திரை நடிகையான ஸ்ருதி சண்முகப்பிரியாவின் கணவர் அண்மையில் தான் மாரடைப்பால் இறந்தார். திருமணமான ஒரு வருடத்திற்குள் ஸ்ருதியின் வாழ்க்கையில் மிகப்பெரிய சோகம் நிகழ்ந்துள்ளது. இந்நிலையில், சென்னையை விட்டு சொந்த ஊருக்கு கிளம்பிய அவர், சோஷியல் மீடியா பக்கத்தில், 'கனத்த இதயத்துடனும் பல நினைவுகளுடன் நீ இல்லாமல் முதல் முறையாக சென்னையை விட்டு வெளியேறுவது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. நான் எங்கு சென்றாலும் உன்னையும் நினைவுகளையும் என் இதயத்தில் என்றென்றும் அழைத்து செல்வேன். இனிவரும் காலங்களில் இதையே செய்வேன்' என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
ஸ்ருதி சண்முகப்பிரியாவின் இந்த நிலையை கண்டும் வருந்தும் ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் சொல்லி வருகின்றனர்.




