‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

குக் வித் கோமாளியின் நான்காவது சீசனுக்கும் முந்தைய சீசனை போலவே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த சீசனில், மக்களை பெரிதும் எதிர்பார்ப்பில் ஆழ்த்திய விஷயமே ஜி.பி.முத்துவின் என்ட்ரி தான். தவிர்க்க முடியாத காரணங்களால் பிக்பாஸ் வீட்டிலிருந்து பாதியிலேயே வெளியேறிய அவர், குக் வித் கோமாளியில் என்ட்ரியானது பலருக்கும் மகிழ்ச்சியை தந்தது.
இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜி.பி.முத்து, கடந்த சில எபிசோடுகளில் கலந்து கொள்ளவில்லை. இந்த வார புரோமோவிலும் ஜி.பி.முத்து இடம்பெறவில்லை. எனவே, அவர் விலகிவிட்டாரா என மக்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இதுகுறித்து தற்போது விளக்கம் கொடுத்துள்ள ஜி.பி.முத்து, 'ரெஸ்ட் இல்லாமல் அலைந்து கொண்டிருப்பதால் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. 26 ஆம் தேதிக்கு மேல் மருத்துவமனைக்கு சென்று பார்த்துவிட்டு தான் சொல்ல முடியும். இப்போது மருந்து சாப்பிட்டு கொண்டிருக்கிறேன்' என்று கூறியுள்ளார். இதன்காரணமாக குக் வித் கோமாளியில் ஜி.பி.முத்து ரீ-என்ட்ரி கொடுப்பது சந்தேகத்திற்குரிய விஷயமாகிவிட்டது.




