ஜான்வி கபூரின் ‛பரம் சுந்தரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தனுஷ் நடிக்கும் 54வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | கதை சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீலீலாவின் ஆஷிகி 3 | மாதம்பட்டி ரங்கராஜ் உடனான திருமணம் : கணவன், மனைவியாக பயணத்தை துவங்கியதாக ஜாய் கிரிஸ்டலா பதிவு | 30 லட்சம் பேரை பிளாக் செய்த அனுசுயா பரத்வாஜ் | தனி இடத்தை பிடிப்பதற்காக சவால்களை எதிர்கொள்கிறேன் : பிந்து மாதவி | கோவையில் அடுத்தடுத்த நாள் இசை நிகழ்ச்சி நடத்தும் வித்யாசாகர், விஜய் ஆண்டனி | ஆக., 1ல் யு-டியூபில் “சித்தாரே ஜமீன் பர்” : யு-டியூபில் படத்தை வெளியிடுவது ஏன்? ஆமீர்கான் விளக்கம் | பிளாஷ்பேக் : கே.பாலச்சந்தரை ஏமாற்றிய 'கல்யாண அகதிகள்' | பிளாஷ்பேக்: லதா மங்கேஷ்கர் பாடலை புறக்கணித்த தமிழ் சினிமா |
கலாஷேத்ரா கல்லூரி விவகாரத்தில் கல்லூரி தரப்பிற்கு ஆதரவாக பிக்பாஸ் அபிராமி நிலைபாடு எடுத்துள்ளார். இதன்காரணமாக பலதரப்பினரும் அபிராமிக்கு எதிராக கருத்துகள் தெரிவித்து வருகின்றனர். முன்னதாக மருத்துவரும் நடிகையுமான டாக்டர்.ஷர்மிளா அபிராமியின் கருத்தை விமர்சித்திருந்தார். அதேபோல மூத்த நடிகையான குட்டி பத்மினியும், அபிராமி திரைத்துறையில் இருந்ததால் அவரை ஒருவர் தொடும்போது தவறாக எந்த உணர்வையும் தராது. ஆனால், மற்ற பெண்களுக்கு அப்படியில்லை என்று சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள அபிராமி, சமூக வலைதளத்தில் குட்டி பத்மினி பேசியதை பதிவிட்டு அதற்கு கீழ், 'உலகத்தில் திரையுலகில் உள்ள எல்லா பெண்களும் உங்களை போலவே இருக்கமாட்டார்கள். சினிமாவில் இருந்ததால் உங்களை ஒருவர் தொடும்போது எந்த ஒரு உணர்வும் இல்லை என்று சொல்வது வருத்தமளிக்கிறது. இன்னொரு விஷயம். உங்களுக்கே பத்திக்கிட்டு வருதுனா? நல்ல குடும்பத்துல பிறந்த எங்களுக்கு எவ்ளோ எரியும். நாங்க பாத்துக்கறோம். நீங்க உங்க ஹெல்த்த பாருங்க' என்று பதிவிட்டுள்ளார். இதில், அபிராமி தன்னை நல்ல குடும்பத்தில் பிறந்த பெண் என்றும் குட்டி பத்மினியின் பிறப்பை தரக்குறைவாகவும் விமர்சித்துள்ளார். அபிராமியின் இந்த செயலை உச்சபட்ச ஆணவம் என்று பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.