நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி |
திரைப்படங்களை ஸ்பூப் செய்யும் காமெடி நிகழ்ச்சியான 'லொள்ளு சபா' நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ஜீவா. திரைப்படங்களிலும், சீரியல்களிலும் ஒரு காலத்தில் பிசியாக நடித்து வந்தார். அவர் தற்போது தமிழருவி மணியன் ஆரம்பித்துள்ள காமராஜர் மக்கள் கட்சியில் மாநில இளைஞரணி தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.
தனது அரசியல் பிரவேசம் பற்றி கூறிய அவர், 'நான் எப்படி ரஜினி ரசிகனோ, அதேபோல் அடிப்படையில் எனக்கு காமராஜரை பிடிக்கும். தமிழக அரசியலை பொறுத்தவரை காமராஜர் ஆட்சிக்கு பிறகிருந்தே வெற்றிடம் உள்ளது. இன்றும் நல்ல ஆட்சிக்கு உதாரணம் காமராஜர் ஆட்சியை தான் உதாரணம் சொல்கிறோம். திராவிட கட்சிகளின் தலைவர்கள் கூட 'அண்ணா ஆட்சி', 'எம்.ஜி.ஆர் ஆட்சி' என சொல்வது இல்லை. காமராஜர் மக்கள் கட்சியை தமிழகம் முழுக்க கொண்டுபோய்ச் சேர்க்க வேலைகள் தொடங்கியுள்ளோம்.
அடுத்தாண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் போட்டியிட உள்ளோம்' என கூறியுள்ளார். ஜீவா அரசியலில் நுழைந்திருக்கும் தகவல் அவரது ரசிகர்கள் பலருக்கும் தெரியாத நிலையில், அவர் அளித்துள்ள பேட்டியை பார்த்து பலரும் ஆச்சரியமடைந்துள்ளனர்.