நடிகர் 'லொள்ளு சபா' ஆண்டனி காலமானார் | டிடி நெக்ஸ்ட் லெவல் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு | மகிழ்ச்சியே வாழ்க்கைக்கு சிறந்த மருந்து : ரகுல் பிரீத் சிங் | ஏப்., 18ல் ரெட்ரோ இசை வெளியீடு | சர்வதேச சினிமா தொழில்நுட்ப கண்காட்சியில் கமல் | எங்களுக்குள்ளும் சண்டை வரும், பிரிவை யோசிக்க வைத்துள்ளது : ரம்பா | ஜெயலலிதாவுக்கு எதிராக குரல் கொடுத்தது ஏன்? 30 ஆண்டுகள் கழித்து காரணம் சொன்ன ரஜினி | பிளாஷ்பேக்: விஜயகாந்த் படத்தில் தலையிட்ட இலங்கை அரசு | பிளாஷ்பேக்: 'சந்திரலேகா'வை தேடி அலைந்த எழுத்தாளர்கள் | அன்னை இல்லத்தில் எனக்கு எந்த உரிமையும் இல்லை: ராம்குமார் பிரமாண மனு தாக்கல் |
திரைப்படங்களை ஸ்பூப் செய்யும் காமெடி நிகழ்ச்சியான 'லொள்ளு சபா' நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ஜீவா. திரைப்படங்களிலும், சீரியல்களிலும் ஒரு காலத்தில் பிசியாக நடித்து வந்தார். அவர் தற்போது தமிழருவி மணியன் ஆரம்பித்துள்ள காமராஜர் மக்கள் கட்சியில் மாநில இளைஞரணி தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.
தனது அரசியல் பிரவேசம் பற்றி கூறிய அவர், 'நான் எப்படி ரஜினி ரசிகனோ, அதேபோல் அடிப்படையில் எனக்கு காமராஜரை பிடிக்கும். தமிழக அரசியலை பொறுத்தவரை காமராஜர் ஆட்சிக்கு பிறகிருந்தே வெற்றிடம் உள்ளது. இன்றும் நல்ல ஆட்சிக்கு உதாரணம் காமராஜர் ஆட்சியை தான் உதாரணம் சொல்கிறோம். திராவிட கட்சிகளின் தலைவர்கள் கூட 'அண்ணா ஆட்சி', 'எம்.ஜி.ஆர் ஆட்சி' என சொல்வது இல்லை. காமராஜர் மக்கள் கட்சியை தமிழகம் முழுக்க கொண்டுபோய்ச் சேர்க்க வேலைகள் தொடங்கியுள்ளோம்.
அடுத்தாண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் போட்டியிட உள்ளோம்' என கூறியுள்ளார். ஜீவா அரசியலில் நுழைந்திருக்கும் தகவல் அவரது ரசிகர்கள் பலருக்கும் தெரியாத நிலையில், அவர் அளித்துள்ள பேட்டியை பார்த்து பலரும் ஆச்சரியமடைந்துள்ளனர்.