தெலுங்கில் அறிமுகமாகும் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா! | ஓவியாவை அசிங்கமாக விமர்சிக்கும் விஜய் ரசிகர்கள் | ஜெயிலர் -2வில் நடிக்க அழைப்பு வருமா? தமன்னா எதிர்பார்ப்பு | தெலுங்கு புரமோஷனில் கன்னடத்தில் பேசி விமர்சனங்களில் சிக்கிய ரிஷப் ஷெட்டி! | 250 கோடி வசூலைக் கடந்த பவன் கல்யாணின் 'ஓஜி' | அக்டோபர் 9ம் தேதி ஓடிடியில் வெளியாகும் வார்-2! | ப்ரீ புக்கிங் - தனுஷின் இட்லி கடை எத்தனை கோடி வசூலித்துள்ளது? | அல்லு அர்ஜுனை ஆட்டுவித்த ஜப்பான் நடன இயக்குனர் | சினிமாவுக்கு மகன் வருவாரா அஜித் சொன்ன பதில் | 2வது படத்திலேயே அம்மாவாக நடிப்பது தவறா? தர்ஷனா கேள்வி |
ஹரிஷ் கல்யாண் நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் படம் 'டீசல்.' மணிவண்ணனின் உதவியாளர் சண்முகம் முத்துசாமி இயக்குகிறார். அதுல்யா ரவி, ஹரிஷ் ஜோடியாக நடிக்கிறார்.
இவர்கள் தவிர வினய் ராய், அனன்யா, கருணாஸ், ரமேஷ் திலக், விவேக் பிரசன்னா, சச்சின் கெடேகர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். திபு நினன் தாமஸ் இசை அமைக்கிறார், எம்.எஸ்.பிரபு, ரிச்சர்ட் என்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார்கள். வருகிற 17ம் தேதி படம் வெளிவருகிறது.
படம் குறித்து இயக்குனர் சண்முகம் முத்துசாமி கூறியிருப்பதாவது: 'டீசல்' மக்களுக்கான படம். நாம் பெட்ரோல், டீசலைக் கடக்காத நாளில்லை. 1970க்குப் பிறகுதான் இங்கே பெட்ரோல், டீசல் இல்லாமல் வாழ முடியாது என்கிற நிலை ஏற்பட்டது. இந்தியர் ஒருவர் சம்பாதிக்கும் 100 ரூபாயில் 70 ரூபாய் எரிபொருளுக்கே செலவு செய்கிற மாதிரி ஆகிவிடுகிறது. அவற்றின் விலை ஏறி இறங்குகிற அரசியல் பற்றி நமக்குத் தெரியாது.
டீசல் உலகின் அண்டர்கிரவுண்ட் ஏரியாவில் இருந்து ஒரு ஹீரோ உருவாகிறான். அவன் மூலம் இந்தப் பிரச்னையை பேசியிருக்கிறேன். பாதிக்கப்பட்ட மக்களின் பார்வையிலிருந்து கதையைச் சொல்கிறேன். எப்படிப்பட்ட கதையாக இருந்தாலும் அதை கமர்ஷியலாத்தான் சொல்ல வேண்டும். எளிமையான மக்களுக்கு எளிமையாக சொல்ல வேண்டும். அதைப் பொறுப்போடு சொல்கிறேன். என்கிறார்.