கூலி, குபேரா படங்கள் குறித்து நாகார்ஜுனா வெளியிட்ட தகவல் | அட்லி படத்தை அடுத்து மேலும் 2 புதிய படங்களில் கமிட்டான அல்லு அர்ஜுன் | தக் லைப் படத்தின் எட்டாவது நாள் வசூல் என்ன | சிம்புவை பற்றி பேச மறுக்கும் நிதி அகர்வால் | திருநெல்வேலி செல்ல பாஸ்போர்ட் கேட்கும் மாரிசெல்வராஜ் | முதல்ல திருமண மண்டபம் : வேகமெடுக்கும் நடிகர் சங்க பணிகள் | படை தலைவன் படத்தில் விஜயகாந்த் காட்சிக்கு வரவேற்பு | இரண்டு மனைவிகளுடன் விவகாரத்து : வெளிப்படையாகப் பேசிய அமீர்கான் | கரிஷ்மா கபூர் முன்னாள் கணவர் திடீர் மரணம் | ஜுலை, ஆகஸ்ட்டில் 'துருவ நட்சத்திரம்' படத்தை வெளியிட முயற்சி |
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடரில் ஹீரோவாக கலக்கி வந்தவர் சதீஷ். சமீபத்திய எபிசோடுகளில் அவரது கேரக்டரை குறைத்து காமெடியனாகவே மாற்றிவிட்டனர். போதாக்குறைக்கு ரஞ்சித் வேறு ஹீரோவாக என்ட்ரி கொடுத்து பாக்கியலட்சுமியிடம் ரொமான்ஸ் செய்து வருகிறார். ரஞ்சித்தின் என்ட்ரி குறித்து முன்னரே பதிவிட்டிருந்த சதீஷ், இனி பாக்கியலெட்சுமி தொடரில் தனது கேரக்டர் குறைக்கப்படும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், அதற்கேற்றார் போல் தற்போது பெட்டிக்கடையில் நின்று டீ ஆத்துவது போல் புகைப்படத்தை வெளியிட்டு 'கூடிய சீக்கிரமே ஈஸ்வரி புட் கேண்டீனில் டீ மாஸ்டரா சேர போறேன்' என்று பதிவிட்டுள்ளார். சதீஷின் இந்த நிலைமையை பார்த்து ரசிகர்கள் சிலர் 'கடைசியில ஆள் இல்லாத கடையில டீ ஆத்துற நிலைமைக்கு வந்துட்டீங்களே கோபி!' என கிண்டலடித்து வருகின்றனர்.