மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
தொலைக்காட்சி பிரபலமான தாடி பாலாஜியும் அவரது மனைவி நித்யாவும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஊடக வெளிச்சம் பெற்றனர். அதேசமயம் அவர்களது குடும்ப விவகாரமும், சண்டையும் கூட மீடியாவில் பேசுபொருளானது. தற்போது பாலாஜியை பிரிந்து வாழ்ந்து வரும் நித்யா, மகள் போஷிகாவுடன் சென்னை மாதவரம் பகுதியில் சாஸ்திரி நகரில் வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நித்யா பக்கத்துவீட்டுக்காரரின் கார் மீது கல் வீசி உடைத்த புகாரில் கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து ஜாமீனில் வந்துள்ள நித்யா தனது கைது குறித்து கூறுகையில், 'அவர் பெயர் மணி. ஓய்வு பெற்ற ஆசிரியர். தற்போது மளிகை கடை நடத்தி வருகிறார். எனக்கும் என் கணவருக்கும் பிரச்னை நடக்கும் போதெல்லாம் அவர் என் கணவருக்கே சப்போர்ட்டாக இருப்பார். பாலாஜி என்னை அடிப்பதை வேடிக்கை பார்ப்பார். எனவே எங்களுக்குள் சுமூகமான நட்பு கிடையாது. பொங்கல் தினத்தில் கூட என்னுடன் சண்டை போட்டார். என்னை பற்றி அவதூறாக பேசுவார். இப்போது அவருடைய காரை நான் சேதப்படுத்தியதாக பொய்யாக புகார் அளித்துள்ளார். சம்பவம் அன்று நான் துணிவு படம் பார்த்துவிட்டு வந்தேன். அப்போது எடுத்த சிசிடிவி காட்சி தான் வைரலாகி வருகிறது. போலீசாரிடம் என் மீதான புகாரை எடுக்கவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்வேன் என்று மிரட்டியிருக்கிறார். எனவே, அவரை எதிர்கொள்வது என்ற முடிவில், நானும் அவர் மீது புகார் அளிக்க உள்ளேன்' என்று கூறியுள்ளார்.