‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

பிக்பாஸ் சீசன் 6 இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. எலிமினேட் ஆன ஹவுஸ்மேட்டுகள் உட்பட பல பிரபலங்கள் என்ட்ரி கொடுத்து நிகழ்ச்சியை புரொமோட் செய்து வருகின்றனர். இந்த வார எவிக்சனில் ஏடிகே வெளியேறியுள்ளார். இந்நிலையில், போட்டியின் இறுதிக்கட்டத்தில் நடக்கும் பணப்பெட்டி டாஸ்க்கானது அண்மையில் நடைபெற்றது. பைனலிஸ்ட் 6 பேரில் கதிர் மட்டும் பணம் மூட்டையை அறுக்க, மற்ற போட்டியாளர்கள் காத்திருக்கும்படி கேட்டனர்.
அப்போது கதிர் நான் பணத்திற்காக இந்த முடிவை எடுக்கவில்லை என கூறி பணமூட்டையை அறுத்துக்கொண்டு பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறும் முடிவை எடுத்தார். கதிர் வீட்டிலிருந்து வெளியேறும் முடிவால் சோகத்தில் ஆழ்ந்த ஷிவினிடம், போட்டிக்காக வாழ்த்து கூறி கை குலுக்க முயன்றார் கதிர். ஆனால், ஷிவின் கைகொடுக்க மறுத்து கைகூப்பி கதிருக்கு விடைகொடுத்தார். கதிர் சிரித்தப்படியே அங்கிருந்து சென்றார். இந்த வீடியோவானது தற்போது இணையதளங்களில் வைரலாக பலரும் ஷிவினுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.




