விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி | சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் கயாடு லோகர், கல்யாணி பிரியதர்ஷன் | ஜப்பானில் தனுஷ், மாரி செல்வராஜ் படத்தின் படப்பிடிப்பு |
தென்னிந்திய சினிமாக்களில் பிரபலமான நடிகையாக வலம் வரும் பிரவீனா, தமிழில் சில சீரியல்களிலும் கமிட்டாகி நடித்து வருகிறார். தற்போது 'இனியா' மற்றும் விஜய் டிவியின் 'ராஜா ராணி 2' தொடரில் நடித்து வருகிறார். சென்ற வருடம், பிரவீனாவின் புகைப்படங்கள் சில, ஆபாசமாக மார்பிங் செய்யப்பட்டு இணையத்தில் வைரலானது. இதனையடுத்து அவர் சைபர் க்ரைமில் புகார் அளித்திருந்தார்.
அதனடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார் தமிழகத்தை சேர்ந்த பாக்யராஜ் என்பவரை டில்லியில் வைத்து கைது செய்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன் பாக்யராஜ் விடுதலையானதாக தெரிய வருகிறது. இந்நிலையில், பிரவீனா மட்டுமில்லாமல் அவருடைய மகளின் புகைப்படங்களும் தற்போது ஆபாசமாக மார்பிங் செய்யப்பட்டது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனால் பிரவீனா சைபர் கிரைமில் மீண்டும் புகார் அளித்ததன் பெயரில் விசாரணை செய்து குற்றவாளியான பாக்யராஜை மீண்டும் கைது செய்துள்ளனர். கைதான பாக்யராஜூக்கு 22 வயது தான் என்பதுடன் கல்லூரி மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.