எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
சின்னத்திரை பிரபலமான ப்ரியதர்ஷினி நீண்ட நாட்களுக்கு பிறகு சமீபத்தில் தான் தொலைக்காட்சி சீரியல்களில் ரீ-என்ட்ரி கொடுத்து நடித்து வருகிறார். தற்போது அவர் 'எதிர்நீச்சல்' தொடரில் ரேணுகா என்ற கதாபாத்திரத்திலும், விஜய் டிவியின் 'நம்ம வீட்டு பொண்ணு' தொடரில் செல்வி என்ற கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். அவர் நடிப்பில், மக்களுக்கு மிகவும் பிடித்தமான கதாபாத்திரம் ரேணுகா கதாபாத்திரம் தான். சொல்லப்போனால் ப்ரியதர்ஷினி 'நம்ம வீட்டு பொண்ணு' தொடரில் நடிப்பது கூட அவரது ரசிகர்கள் பலருக்கும் தெரியாது.
இந்நிலையில், ப்ரியதர்ஷினிக்கு பதில் பானுமதி என்ற புதிய நடிகை நடிக்க உள்ளதாக புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. இதனை பார்த்து ரசிகர்கள் சிலர் 'எதிர்நீச்சல்' தொடரிலிருந்து தான் ப்ரியதர்ஷினி விலகிவிட்டார் என அப்செட்டாகினர். ஆனால், ப்ரியதர்ஷினி எதிர்நீச்சல் தொடரிலிருந்து விலகவில்லை. விஜய் டிவியின் 'நம்ம வீட்டு பொண்ணு' தொடரில் நடித்து வந்த செல்வி கதாபாத்திரத்திலிருந்து தான் விலகியுள்ளார். தற்போது அந்த செல்வி கதாபாத்திரத்தில் தான் பானுமதி நடிக்க உள்ளார். இந்த உண்மையை தெரிந்து கொண்ட ரசிகர்கள் நிம்மதியடைந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.