கூலி படத்தில் ரஜினி உடன் நடித்தது ஸ்பெஷலான அனுபவம் : பூஜா ஹெக்டே | அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? : ரவி மோகன் கொடுத்த பதில் | விஜய் சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தே? | பாங்காக் பறந்த இட்லி கடை படக்குழு | 24 லட்சம் வாடகையில் புதிய அபார்ட்மென்ட்டுக்கு குடிபெயர்ந்த ஷாருக்கான் | உடை மாற்ற உதவிக்கு வருவேன் என அடம்பிடித்த போதை நடிகர் : மலையாள நடிகை அதிர்ச்சி தகவல் | ஜெய ஜெய ஜெய ஜெய ஹே ஹிந்தி ரீமேக்கை அமீர்கான் கைவிட்டது ஏன்? : நடிகர் புது தகவல் | மீரா ஜாஸ்மின் பெயர் என் காதுகளில் ஒலிக்காத நாளே இல்லை ; சிலாகித்த நயன்தாரா | கேரள முதல்வரின் சொந்த ஊர் கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் | கிடப்பில் இருக்கும் பிரபுதேவா படத்தை வெளியிட முயற்சி |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'ராஜா ராணி 2' தொடரில் வில்லியாக நடித்து மிகவும் புகழ் பெற்றவர் வீஜே அர்ச்சனா. சிறந்த வில்லிக்கான சிறப்பு விருதையும் தட்டிச் சென்ற அவர், திடீரென சீரியலை விட்டு விலகினார். வாழ்வின் அடுத்தக்கட்டத்தை நோக்கி செல்ல இருப்பதாகவும், விரைவில் புதிய பரிமாணத்தில் ரசிகர்களை சந்திப்பேன் எனவும் அப்போது தெரிவித்திருந்தார். அவர் சினிமாவில் நடிக்க இருப்பதால் தான் சீரியலை விட்டு விலகிவிட்டார் என செய்திகள் பரவியது. ஆனாலும், அர்ச்சனா என்ன செய்கிறார் என்பது குறித்த அப்டேட்டுகள் எதுவும் வெளியாகவில்லை. அவ்வப்போது போட்டோஷூட் மட்டுமே நடத்தி வந்தார். நீண்ட நாட்கள் கழித்து சமீபத்தில் தான் அவர் நடிப்பில் 'தம்மா துண்டு' என்ற ஆல்பம் பாடல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில், பட வாய்ப்புகளுக்காக காத்திருந்த அர்ச்சனா தற்போது அருள்நிதி நடிக்கும் டிமாண்டி காலனி 2 படத்தில் அருள்நிதியின் தங்கையாக நடிக்க கமிட்டாகி உள்ளார். அதுமட்டுமல்லாமல், அவர் நடிப்பில் உருவாகியுள்ள 'அவள் என்னவள்' என்கிற வலைதொடரும் விரைவில் வெளியாகவுள்ளது. இவ்வாறாக இந்த புத்தாண்டின் தொடக்கமே அர்ச்சனாவுக்கு இரட்டிப்பு சந்தோஷத்தை கொடுத்துள்ள நிலையில், அர்ச்சனாவுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.