படுகவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்ட ஜெனிபர் | ஜுனியர் என்டிஆருக்கு வாழ்த்து சொன்ன பவன் கல்யாண் | தெலுங்கு பட ஷூட்டிங்கில் ரச்சிதா மகாலெட்சுமி | 'சத்யா' காட்சியைப் பகிர்ந்து கவியூர் பொன்னம்மாவுக்கு கமல்ஹாசன் இரங்கல் | சுதா சந்திரன் பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் குழுவினர் | சீக்கிரமே அசைவம் சாப்பிடுவதை நிறுத்திவிடுவேன் - ராஜலெட்சுமி பேட்டி | 160 படங்களைக் கடந்த 2024 ரிலீஸ், 6 படங்கள் மட்டுமே 100 கோடி வசூல் | வித்தியாசமா கூவுறாங்க! மணிமேகலை வெளியிட்ட நறுக் வீடியோ | சீரியலிலும் அட்ஜெஸ்ட்மென்ட் இருக்கு - நிமிஷிகா பளீச் பேட்டி | சிம்பு நடிக்க இருந்த படத்தில் ரஜினியா? |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'ராஜா ராணி 2' தொடரில் வில்லியாக நடித்து மிகவும் புகழ் பெற்றவர் வீஜே அர்ச்சனா. சிறந்த வில்லிக்கான சிறப்பு விருதையும் தட்டிச் சென்ற அவர், திடீரென சீரியலை விட்டு விலகினார். வாழ்வின் அடுத்தக்கட்டத்தை நோக்கி செல்ல இருப்பதாகவும், விரைவில் புதிய பரிமாணத்தில் ரசிகர்களை சந்திப்பேன் எனவும் அப்போது தெரிவித்திருந்தார். அவர் சினிமாவில் நடிக்க இருப்பதால் தான் சீரியலை விட்டு விலகிவிட்டார் என செய்திகள் பரவியது. ஆனாலும், அர்ச்சனா என்ன செய்கிறார் என்பது குறித்த அப்டேட்டுகள் எதுவும் வெளியாகவில்லை. அவ்வப்போது போட்டோஷூட் மட்டுமே நடத்தி வந்தார். நீண்ட நாட்கள் கழித்து சமீபத்தில் தான் அவர் நடிப்பில் 'தம்மா துண்டு' என்ற ஆல்பம் பாடல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில், பட வாய்ப்புகளுக்காக காத்திருந்த அர்ச்சனா தற்போது அருள்நிதி நடிக்கும் டிமாண்டி காலனி 2 படத்தில் அருள்நிதியின் தங்கையாக நடிக்க கமிட்டாகி உள்ளார். அதுமட்டுமல்லாமல், அவர் நடிப்பில் உருவாகியுள்ள 'அவள் என்னவள்' என்கிற வலைதொடரும் விரைவில் வெளியாகவுள்ளது. இவ்வாறாக இந்த புத்தாண்டின் தொடக்கமே அர்ச்சனாவுக்கு இரட்டிப்பு சந்தோஷத்தை கொடுத்துள்ள நிலையில், அர்ச்சனாவுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.