மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
சினிமா மற்றும் சின்னத்திரையில் பல வருடங்களாக நடித்து வரும் சுசித்ரா, 14 வயதிலேயே கன்னட சினிமாவில் அறிமுகாமாகி பல படங்களில் நடித்துள்ளார். தமிழிலும் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான சைவம் படத்தில் நடித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் தமிழ் சின்னத்திரையிலும் 2008ம் ஆண்டிலேயே 'நாணல்' என்ற தொடரின் மூலம் அறிமுகமாகியிருந்தார். ஆனால், அப்போதெல்லாம் இவர் இந்த அளவுக்கு பிரபலமாகவில்லை. சினிமாவிலும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இந்நிலையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலெட்சுமி' தொடர் சுசித்ராவுக்கு செலிபிரேட்டி அந்தஸ்தை கொடுத்தது. மேலும், அந்த தொடரின் 300வது எபிசோடை வெற்றிவிழாவாக கொண்டாடிய நிகழ்ச்சியில் பலரும் சுசித்ராவை தங்கள் ரோல் மாடலாக நினைத்து தங்களது வாழ்வில் சாதித்ததை பதிவு செய்திருந்தனர். இந்த அளவுக்கு மக்கள் மனதில் சுசித்ரா தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தாலும், அவரே இப்போது தான் தன் வீடு வாங்கும் கனவை நனவாக்கியுள்ளார்.
சென்னையில் புதிதாக வீடு வாங்கியுள்ள சுசித்ரா அண்மையில் கிரகப்பிரவேச நிகழ்வை நடத்தியிருந்தார். இதனையடுத்து சுசித்ராவின் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். பலவருடங்களாக திரைத்துறையில் பயணித்தாலும் சுசித்ராவின் வாழ்வில் இப்போது தான் வசந்தகாலம் ஆரம்பமாகியுள்ளது என்பதால், இந்த வெற்றி அவருக்கு என்றென்றும் நிலைக்க வேண்டும் எனவும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.