மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கள்ளிக்காட்டு பள்ளிக்கூடம்' தொடரின் மூலம் சின்னத்திரை நடிகராக அறிமுகமானவர் அழகப்பன். தொடர்ந்து 'ஆபிஸ்' 'மாப்பிள்ளை', 'ரெட்டை வால் குருவி', 'தலையனை பூக்கள்', 'ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி' ஆகிய தொலைக்காட்சி தொடர்களிலும் சினிமாவில் 'விதி மதி உல்ட்டா', 'நண்பர்கள் கவனத்திற்கு', 'வெயிலோடு விளையாடு' ஆகிய படங்களில் சப்போர்ட்டிங் அல்லது காமெடியன் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.
ஆனால், அவர் தற்போது 'ஆனந்தராகம்' தொடரில் ஹீரோவாக நடித்து வருகிறார். மக்களிடத்திலும் இந்த தொடர் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், ஆனந்த ராகம் தொடர் 100 வது எபிசோடை எட்டியுள்ளது. இதை முன்னிட்டு அழகப்பன் தனது வெளியிட்டுள்ள பதிவில், '100 வெறும் நம்பர் தான். ஆனால் ஹீரோவாக எனக்கு இது 100வது எபிசோடு. என்னை ஹீரோவாக ஏற்றுக்கொண்டதற்கும் பாராட்டியதற்கும் நன்றி. இந்த தருணத்தில் நான் எனது சக நடிகர்களுக்கும் எனது குழுவினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பெரிய வெற்றியை எனக்களித்த மக்களுக்கும் மிகவும் நன்றி. இதேபோல் 1000, 2000 எபிசோடுகளை கொண்டாடவும் ஆசைபடுகிறேன்' என்று கூறியுள்ளார்.
அழகப்பனின் இந்த பதிவிற்கு சீரியல் ரசிகர்கள் பலரும் பாசிட்டிவான கமெண்டுகளுடன் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
--