மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
சின்னத்திரை நடிகர்கள் அர்னவ் - திவ்யா ஸ்ரீதர் விவகாரம் தற்போது சோஷியல் மீடியாவில் ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது. அர்னவ் தனக்கு துரோகம் செய்வதாகவும், தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் அண்மையில் திவ்யா ஸ்ரீதர் போலீஸ் புகார் கொடுத்திருந்தார். இதனையடுத்து அதற்கு பதில் அளித்த அர்னவ், ஊடகங்களில் திவ்யாவுக்கு மனநிலை சரியில்லை. என்னை மிரட்டுகிறார் என கூறி வருகிறார்.
இந்நிலையில், அர்னவின் முகமூடியை கிழித்து அவர் உண்மை முகத்தை காட்டும் ஆடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கல்யாணப் பரிசு 2 தொடரில் நடித்த ரிஹானா என்ற நடிகையுடன் அர்ணவ் தொலைபேசியில் பேசும் உரையாடலில், 'ஹன்சிதாகிட்ட நான் உன்கிட்ட தப்பா நடந்ததா சொன்னியா?' என்று கேட்கிறார். அதற்கு ரிஹானா, 'நீ உன் ப்ளாட்டுக்கு என்ன கூப்பிடல? அப்பார்ட்மெண்ட்ல யாரும் இல்லன்னு சொல்லல?. நீயும் திவ்யாவும் இருக்கும் போது என்னை கூப்பிட்டிருந்தா நான் வந்திருப்பேன். ஆனா, நீ என்னை அப்படியா கூப்பிட்ட?. அப்பார்ட்மெண்ட்ல யாரும் இல்ல. உன்னை யாரும் கேள்வி கேட்கமாட்டாங்க. நான் என்ன உன்னை கடிச்சா திங்கப் போறேன். உன் அனுமதி இல்லாமல் என் விரல் கூட உன் மேல படாதுன்னு சொன்னியே. நீ கூப்பிடறதா வச்சே நீ என்ன எதுக்காக கூப்பிடறேன்னு தெரிஞ்சு தான் நான் வரல. உன்னை நான் நல்லவன்னு நினைச்சேன். திவ்யாவுக்கு துரோகம் பண்ணாத. கர்ப்பிணி பாவம் உன்ன சும்மா விடாது' என்று எச்சரித்து பேசியுள்ளார்.
அந்த ஆடியோவானது இணையத்தில் லீக்காகி வைரலாகி வருகிறது.