மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். இதில் முல்லை என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் நடிகை காவ்யா அறிவுமணி. சித்ராவுக்கு பின் முல்லை கதாபாத்திரத்தில் மாற்றம் செய்யப்பட்ட காவ்யா விரைவிலேயே ரசிகர்களை தன் பக்கம் இழுத்தார். தற்போது குமரன் - காவ்யா கெமிஸ்ட்ரி ரசிகர்களின் பேவரைட்டாக இருந்து வருகிறது.
இந்நிலையில், காவ்யா கடந்த மாதத்துடன் சீரியலை விட்டு விலகிவிட்டதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருந்த நிலையில், அதை அதிகாரப்பூர்வமாக காவ்யாவும் தனது தெரிவித்துள்ளார். அதேசமயம் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருப்பதால் முல்லை கேரக்டரில் யார் நடிக்கப்போகிறார் என ரசிகர்கள் மத்தியில் ஆவல் எழுந்தது.
தற்போது முல்லை கதாபாத்திரத்தில் 'சிப்பிக்குள் முத்து' தொடரின் நாயகி லாவாண்யா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 'சிப்பிக்குள் முத்து' ஒளிபரப்பான சில மாதங்களுக்குள்ளாகவே பிக்பாஸ் நிகழ்ச்சியை முன்னிட்டு அண்மையில் முடித்து வைக்கப்பட்டது. இருப்பினும் ரசிகர்கள் மனதில் மிகக்குறுகிய காலத்திலேயே இடம்பிடித்த லாவண்யா முல்லை கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவர் தான் என சின்னத்திரை ரசிகர்கள் பேசி வருகின்றனர்.