எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
சின்னத்திரை நடிகையான திவ்யா ஸ்ரீதர் பெங்களூரில் பிறந்து வளர்ந்தவர். கன்னட சீரியலில் மிகவும் புகழ் பெற்று விளங்கிய அவர், தமிழில் 'கேளடி கண்மணி' தொடரின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து 'மகராசி' தொடரில் நடித்து கொண்டிருந்த போது திடீரென தொடரை விட்டு விலகினார். தற்போது மீண்டும் அதேசேனலில் 'செவ்வந்தி' என்கிற புதிய தொடரில் நடித்து வருகிறார். மிகக் குறுகிய காலக்கட்டத்திலேயே தமிழ் ரசிகர்கள் ஏராளமானோர் திவ்யாவுக்கு ரசிகர்களாகிவிட்டனர்.
திவ்யாவின் முதல் திருமணம் தோல்வியில் முடிந்ததையடுத்து அண்மையில் பிரபல சீரியல் நடிகரான ஆர்னவ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் சிம்பிளாக நடத்தப்பட்டு சென்னை புரசைவாக்கத்தில் ரிஜிஸ்டர் ஆபிஸில் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, திவ்யாவுக்கு ஆர்னவுடன் திருமணம் நடந்தது பலருக்கு தெரியாது. திவ்யாவும் அவரது முதல் திருமணத்தில் பிறந்த குழந்தை ஜெய்சனாவும் தற்போது ஆர்னவுடன் வசித்து வருகிறார்கள்.
இந்நிலையில், தான் கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியான செய்தியை ஆர்னவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்துடன் திவ்யா பகிர்ந்திருந்தார். இதனால், அவரது ரசிகர்கள் முதலில் குழம்பி போயினர். அதன்பின் திவ்யாவின் இரண்டாவது திருமணம் குறித்து தெளிவடைந்து பிறகு இரண்டாவது குழந்தை நல்ல முறையில் பிறக்க வேண்டும் என வாழ்த்தி வருகின்றனர்.