தளபதி திருவிழா : விஜய்க்காக களமிறங்கும் பிரபல பாடகர்கள் | 100 கோடிக்கு மேல் விற்கப்பட்டதா 'ஜனநாயகன்' ? | ரூ.10 கோடி டெபாசிட் செய்ய விஷாலுக்கு கோர்ட் உத்தரவு | விஜய் சேதுபதி, பூரி ஜெகன்னாத் படத்தின் படப்பிடிப்பு நிறைவு | ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு கீர்த்தி சுரேஷ் படம் | தெரு நாய்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த நிவேதா பெத்துராஜ் | 2025 : 11 மாதங்களில் 250ஐக் கடக்கும் தமிழ்ப் பட வெளியீடுகள் | படம் இயக்க தயாராகும் கிர்த்தி ஷெட்டி | சிக்ஸ் பேக் மூலம் என்னை நானே செதுக்கி கொண்டேன் : மகத் சொல்கிறார் | 5 கேரக்டர்கள், 6 ஆண்டு உழைப்பு : ஒருவரே வேலை செய்த ஒன்மேன் |

சோஷியல் மீடியாக்களின் பெருவளர்ச்சி ஒருபுறம் பிரபலங்கள் எதை செய்தாலும் டிரெண்டாக்கி வருகிறது. இந்த செலிபிரேட்டிகளும் இதை வைத்துக்கொண்டு அநியாயத்திற்கு அல்சாட்டியம் செய்து வருகின்றனர். அந்த வரிசையில் சீரியல் வில்லி நடிகை சுப்புலெட்சுமி தன் கணவருடன் எடுத்துக்கொண்ட ப்ரீ வெட்டிங் போட்டோஷூட் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
'அழகிய தமிழ் மகள்', 'அன்பே வா' ஆகிய தொடர்களில் வில்லியாக நடித்து புகழ் பெற்றவர் நடிகை சுப்புலெட்சுமி ரங்கன். அண்மையில் இவர் ப்ரீ வெட்டிங் போட்டோஷூட் எடுத்துள்ளார். அந்த போட்டோ, வீடியோக்களை பகிர்ந்துள்ளார். அதில், சுப்புலெட்சுமியின் கணவர் மேலாடை இன்றி சிக்ஸ்பேக் உடலைக் காட்டிக்கொண்டு நிற்க, சுப்புலெட்சுமி சிக்ஸ் பேக் வயிற்றின் மீது முத்தமிடுகிறார். மேலும் இருவரும் உதட்டு முத்தமும் கொடுப்பது மாதிரியான நெருக்கமாக இருக்கும் போட்டோ மற்றும் வீடியோக்களை பதிவிட்டுள்ளனர்.
கணவன் மனைவி அந்தரங்க நெருக்கத்தை வெளிப்படையாக பொதுவெளியில் காட்டலாமா? என பலரும் சுப்புலெட்சுமியை திட்டி தீர்த்து வருகின்றனர்.




