மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
சின்னத்திரை ஆங்கர் அர்ச்சனா தமிழின் முன்னணி சேனல்களில் பல ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். அவரை பிடிக்காதவர்களே இருக்க முடியாது, என்று சொல்லுமளவுக்கு பெயரெடுத்திருந்தார். ஆனால், அவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி கெட்டபெயரை பெற்று தந்தது. பிக்பாஸ் சென்ற அர்ச்சனாவை பலரும் வெறுத்து விமர்சித்தனர். இந்நிலையில், தற்போது ஊடகம் ஒன்றுக்கு சாராவும் அர்ச்சனாவும் சேர்ந்து பேட்டியளித்தனர். அப்போது, சாராவிடம் அர்ச்சனா செய்ததில் பிடித்தது, பிடிக்காதது என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் கூறிய சாரா, 'சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பேட்டி எடுத்தது மிகவும் பிடித்தது. ஆனால், அம்மா பிக்பாஸ் போனது பிடிக்கவில்லை. அதனால் தான் அவரை பற்றிய நெகடிவ் கமெண்டுகள் வந்தன. என் அம்மாவை பற்றி எனக்கு தெரியும். ஆனால், வெறும் 40 நிமிடத்தை பார்த்துவிட்டு எல்லோரும் அவரை ஜட்ஜ் செய்தார்கள். ஆனாலும், அம்மா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போயிருக்கக்கூடாது' என்று கூறியுள்ளார்.