நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

நடிகர் திலகம் சிவாஜியின் 97வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதற்காக அவரது ரசிகர் மன்றத்தினர் ஏராளமான ஏற்பாடுகளை செய்துள்ளனர். அடையாறில் உள்ள சிவாஜி மணிமண்டபத்தில் உள்ள சிவாஜி சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலரஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் ராம்குமார், பிரபு, விக்ரம் பிரபு, துஷ்யந்த் உள்ளிட்ட சிவாஜி குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
சிவாஜி பிறந்தநாளை முன்னிட்டு கமல் வெளியிட்டுள்ள பதிவில், “காலங்கள் மாறலாம், தொழில் நுட்பங்கள் கூடலாம், சினிமாவின் முகமே மாற்றத்துக்கு இலக்காகியிருக்கலாம். ஆனால், நடிப்புக் கலையின் உச்சம் என்பது எப்படி இருக்கும் என்று காட்டிய மாபெரும் கலைஞன் சிவாஜி சாரின் பங்களிப்பு மறக்கவொண்ணாதது. பிரமிக்க வைக்கும் சாதனைகளைச் செய்து காட்டிய வரை பிறந்தநாளில் வணங்குகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.