மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
தன்னைத் தானே திருமணம் செய்துகொள்வது என்பது சமீபகாலமாக அதிகமாக நடந்து வருகிறது. இது ஒரு சமுதாய சீர்கேடு என்று விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில் பிரபலங்களே மலிவான விளம்பரங்களுக்கு அதை செய்து பரப்பி வருகிறார்கள். கடந்த ஜூன் மாதம் குஜராத் மாநிலம் பரோடா பகுதியைச் சேர்ந்த ஷாமா பிந்து என்கிற 24 வயது பெண் ஒருவர் தன்னைத் தானே திருமணம் செய்துகொண்டது மட்டுமின்றி ஹனிமூன் சென்றும் அதிர்ச்சி ஏற்படுத்தினார்.
இந்நிலையில், தற்போது பிரபல ஹிந்தி டி.வி தொடர் நடிகை கனிஷ்கா ஷோனியும் தன்னை தானே திருமணம் செய்து கொண்டதாக அறிவித்திருக்கிறார். தியா அவுர் பாத்தி ஹம் என்கிற சீரியல் மூலம் புகழ்பெற்றவர் இவர். இந்த தொடர் தமிழில் ‛என் கணவன் என் தோழன்' என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது.
சுயதிருமணம் குறித்து கனிஷ்கா கூறியிருப்பதாவது: தனிமை தான் எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. நான் நினைத்தபடி எந்த ஒரு ஆணையும் இதுவரை என் வாழ்நாளில் சந்திக்கவில்லை. அதனால் தனியாகவே இருக்க முடிவு செய்துவிட்டேன். திருமணம் என்பது உடல் சம்பந்தப்பட்ட விஷயம் மட்டுமல்ல அதில் காதல், நேர்மை ஆகியவையும் இருக்க வேண்டும். நான் நிதானத்தோடும், தெளிந்த சிந்தனையோடும்தான் இதை செய்திருக்கிறேன். என்று கூறி உள்ளார்.