டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

தன்னைத் தானே திருமணம் செய்துகொள்வது என்பது சமீபகாலமாக அதிகமாக நடந்து வருகிறது. இது ஒரு சமுதாய சீர்கேடு என்று விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில் பிரபலங்களே மலிவான விளம்பரங்களுக்கு அதை செய்து பரப்பி வருகிறார்கள். கடந்த ஜூன் மாதம் குஜராத் மாநிலம் பரோடா பகுதியைச் சேர்ந்த ஷாமா பிந்து என்கிற 24 வயது பெண் ஒருவர் தன்னைத் தானே திருமணம் செய்துகொண்டது மட்டுமின்றி ஹனிமூன் சென்றும் அதிர்ச்சி ஏற்படுத்தினார்.
இந்நிலையில், தற்போது பிரபல ஹிந்தி டி.வி தொடர் நடிகை கனிஷ்கா ஷோனியும் தன்னை தானே திருமணம் செய்து கொண்டதாக அறிவித்திருக்கிறார். தியா அவுர் பாத்தி ஹம் என்கிற சீரியல் மூலம் புகழ்பெற்றவர் இவர். இந்த தொடர் தமிழில் ‛என் கணவன் என் தோழன்' என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது.
சுயதிருமணம் குறித்து கனிஷ்கா கூறியிருப்பதாவது: தனிமை தான் எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. நான் நினைத்தபடி எந்த ஒரு ஆணையும் இதுவரை என் வாழ்நாளில் சந்திக்கவில்லை. அதனால் தனியாகவே இருக்க முடிவு செய்துவிட்டேன். திருமணம் என்பது உடல் சம்பந்தப்பட்ட விஷயம் மட்டுமல்ல அதில் காதல், நேர்மை ஆகியவையும் இருக்க வேண்டும். நான் நிதானத்தோடும், தெளிந்த சிந்தனையோடும்தான் இதை செய்திருக்கிறேன். என்று கூறி உள்ளார்.




