டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

விஜய் டிவியில் ராஜா ராணி சீசன் 2 ஒளிபரப்பாகி வருகிறது. இதில் முதலில் கதாநாயகியாக நடித்தவர் ஆல்யா மானசா. அதன்பின் பிரசவத்தின் காரணமாக சீரியலை விட்டு விலகினார். தற்போது ரியா விஸ்வநாத் என்பவர் கதாநாயகியாக நடித்து வருகிறார். ஆல்யா விலகிய பின் சீரியல் ட்ராப் ஆகிவிடும் என பலரும் கருதி வந்த நிலையில், ராஜா ராணி சீசன் 2 வெற்றிகரமாக 500வது எபிசோடை கடந்துள்ளது. இதனை கொண்டாடும் விதமாக வெற்றி விழா நடைபெற்றது. அந்த விழாவில் நடிகை ஆல்யா மானசாவும் கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சிக்கான புரோமோ தற்போது வெளியாகி உள்ளது. அதில், ராஜா ராணி சீசன் 2வின் இயக்குநர் பிரவீன் பேசும்போது, 'ஷூட்டுக்கு ஆன் டைம் வருவதில் ஆல்யா தான் முதல் ஆள். குதிக்கிற மாதிரியான ஷாட் என்று சொன்னால் போதும், உடனே மாடியிலிருந்து கூட குதிக்க தயராகிவிடுவார். சின்சியாரிட்டியின் மறு உருவமே ஆல்யா தான்' என்பது போல் அவரை புகழ்ந்தார்.
இதன்காரணமாகவும், குழந்தை பிறந்த பின் ஆல்யா கலந்து கொள்ளும் முதல் டிவி நிகழ்ச்சி இதுதான் என்பதாலும் ரசிகர்கள் பலரும் வெற்றிவிழா நிகழ்ச்சியை ஆவலோடு எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிகழ்ச்சியானது வரும் சுதந்திர தினத்தன்று மாலை 4 மணிக்கு சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப்பாக உள்ளது.




