லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
கமரகட்டு, விந்தை, இணைய தலைமுறை, பிழை, எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மனீஷாஜித். சினிமா வாய்ப்புகள் கிடைக்காததால் சின்னத்திரை தொடரில் நடிக்க தொடங்கினார். உயிரே, அம்மன் தொடர்களில் நடித்த அவர் கடைசியாக கன்னத்தில் முத்தமிட்டால் தொடரில் நடித்தார். அந்த தொடரில் இருந்து சமீபத்தில் விலகினார்.
விலகியதற்கான காரணத்தை தற்போது கூறியுள்ளார். பேசிய படி சம்பளம் தரவில்லை. 6 லட்சம் சம்பள பாக்கி வைத்துள்ளனர். தினமும் 14 மணி நேரம் வேலை வாங்கினார்கள். படப்பிடிப்பில் சரியான பாதுகாப்பு இல்லை. சின்ன சின்ன விபத்து ஏற்பாட்டாலும் அதையும் தாங்கிக் கொண்டு நடிக்க வேண்டியது இருந்தது. கொரோனா காலத்தில்கூட விடுமுறை தராமல் வேலை வாங்கினார்கள். இப்படி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அவர் கூறியுள்ளார்.