துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் 'செம்பருத்தி' தொடரில் அருண் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் வீஜே கதிர். தொடர்ந்து அதே சேனலில் பல ஹிட் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில், ஜீ தமிழில் புதிதாக ஆரம்பமாகி ஒளிபரப்பாகி வரும் 'கன்னத்தில் முத்தமிட்டால்' என்கிற தொடரில் வீஜே கதிர் எண்ட்ரி கொடுத்துள்ளார். ஹீரோயினை பெண் பார்க்கும் மாப்பிள்ளையாக கதிர் நடித்துள்ளார். அவரது கதாபாத்திரம் சீரியல் முழுக்க பயணிக்குமா? அல்லது கெஸ்ட் ரோல் மட்டும் தானா? என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை. எனினும், செம்பருத்தி தொடரில் நடிக்க ஆரம்பித்ததில் இருந்து நீண்ட நாள் கழித்து புதிய சீரியலில் வீஜே கதிர் என்ட்ரி கொடுத்துள்ளதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதேபோல மேலும் பல சீரியல்களில் வீஜே கதிர் நடிக்க வேண்டும் எனவும் வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.