15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை | ஆஸ்கர் லைப்ரரியில் இடம்பிடித்த தமிழர் படம் | பிளாஷ்பேக் : காரில் பயணம் செய்யாத நடிகை | பிளாஷ்பேக் : காப்பி மேல் காப்பி அடிக்கப்பட்ட படம் | கதாநாயகனாகத் தொடரும் சூரி, இடைவெளி விடும் சந்தானம்.. | நான் பெண்ணாக பிறந்திருந்தால் கமலை திருமணம் செய்திருப்பேன் : சிவராஜ்குமார் | ஜிங்குச்சா - கமல்ஹாசன், சிலம்பரசன் நடனத்தில்… முதல்பாடல் நாளை வெளியீடு |
இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் சின்னத்திரை நேயர்களுக்கு மிகவும் பரிட்சயமான முகம். சினிமா மட்டுமல்லாமல் சின்னத்திரையில் சில நல்ல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருக்கிறார். தற்போது சொந்தமாக யூ-டியூப் சேனல் வைத்திருக்கும் ஜேம்ஸ் வசந்தன் டிவி ரியாலிட்டி ஷோக்களில் நடக்கும் சில தவறுகளை சுட்டிக்காட்டியும், நல்ல விஷயங்களை பாராட்டியும் பேசி வருகிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி வந்துவிட்டாலே ரசிகர்கள் பலரும் ஜேம்ஸ் வசந்தனின் கருத்தைக் கேட்க அவரது சோஷியல் மீடியாவுக்கு படையெடுத்து விடுவார்கள். இந்நிலையில், அவர் விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை கடுமையாகவிமர்சித்துள்ளார். சமீபத்தில் ஒளிபரப்பான அந்நிகழ்ச்சியில் ரிஹானா என்ற சிறுமி 'கருத்தவென்லாம் கலீஜா' என்ற பாடலை பாடினார். அதில் ஒரு பல்லவியில் தக்காளி என்ற வார்த்தை வரும். விவரம் அறியாத அந்த சிறுமியும் தக்காளி என்ற வார்த்தையை பாடகரை போலவே பாடுகிறார்.
இதுகுறித்து பேசியுள்ள ஜேம்ஸ் வசந்தன், அது ஒரு கெட்டவார்த்தையின் இணைச்சொல் என்பது எல்லா ஆண்களுக்கும் தெரியும். அந்த பிஞ்சு உதடுகள் அதை பாடும் போது எனக்கு திக்கென்று இருக்கிறது. கெட்ட வார்த்தைகளை பாடித்தான் பிழைப்பு நடத்த வேண்டுமா?' என கடுமையாக பேசியுள்ளார்.