எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
'வானத்தைப் போல' தொடருக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த தொடரில் முதன் முதலில் ஹீரோ மற்றும் தங்கை ரோலில் நடித்து வந்த தமன் குமார், ஸ்வேதா கெல்கே திடீரென அடுத்தடுத்து சீரியலை விட்டு விலகினர். தற்போது அந்த ரோல்களில் ஸ்ரீகுமார் மற்றும் மான்யா நடித்து வருகின்றனர். ஹீரோ சின்னராசுவின் திருமணத்தை வைத்து சீரியல் டிஆர்பியும் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், பொன்னி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த ப்ரீத்தி குமார் சீரியலை விட்டு விலகியுள்ளார். இத்துடன் இந்த சீரியலில் நடித்த மூன்று முக்கிய நடிகர்கள் சீரியலை விட்டு வெளியேறி விட்டனர். அவர் விலகியதற்கான காரணம் சரிவர தெரியாத நிலையில், சாந்தினி பிரகாஷ் இனி பொன்னியாக தொடர்வார் என்ற செய்திகள் வெளியாகியுள்ளன.
சாந்தினி பிரகாஷூம் நல்ல நடிகை தான் ஆனால், பொன்னி கேரக்டருக்கு ப்ரீத்தி குமார் நல்ல பொருத்தமாக இருந்தார் என சீரியல் நேயர்கள் புலம்பி வருகின்றனர். ஸ்ரீகுமார், மான்யாவை போல சாந்தினியும் கேரக்டரை பிடித்துக்கொள்வாரா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.