'3 பிஎச்கே' முதல் 'தம்முடு' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | ரிஷப் ஷெட்டியின் புதிய படத்தின் அப்டேட்! | சென்னை கல்லூரி சாலை நடிகர் ஜெய்சங்கர் சாலை ஆகிறது | மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணி! | சரியான நேரம் அமையும் போது சூர்யாவை வைத்து படம் இயக்குவேன் -லோகேஷ் கனகராஜ்! | புதுமுக இயக்குனரை ஆச்சரியப்படுத்திய விஜய்! - இயக்குனர் பாபு விஜய் | விஜய் உட்கட்சி பிரச்னை: உதயாவின் 'அக்யூஸ்ட்' படத்தில் இடம் பெறுகிறதா? | போகியை புறக்கணித்தார் சுவாசிகா: பழசை மறப்பது சரியா? | ஒரே படத்தில் இரண்டு புதுமுகங்கள் அறிமுகம் | துல்கர் இருப்பதால் நான் தனிமையை உணரவில்லை: கல்யாணி |
பிரபல சீரியல் நடிகர் நவீன் குமாருக்கும், செய்திவாசிப்பாளர் கண்மணி சேகருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. சோஷியல் மீடியாவில் இருவருக்குமே அதிக பாலோயர்கள் இருப்பதால் இவர்கள் வெளியிடும் அப்டேட்டுகள் விரைவிலேயே வைரலாகி வருகின்றன.
இந்நிலையில், தனது வருங்கால மனைவியுடன் பழனி முருகன் கோவிலுக்கு சென்றுள்ள நவீன் குமார் அங்கே காவடி தூக்கி நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளார். அங்கே இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படம் மற்றும் வீடியோக்களை நவீன் வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் இதை பார்த்துவிட்டு 'எப்போது திருமணம். சீக்கிரம் அடுத்த அப்டேட் விடுங்க' என கேட்டு வருகின்றனர்.
நவீன் குமார் கலர்ஸ் டிவியின் 'இதயத்தை திருடாதே' சீரியலில் ஹீரோவாக நடித்து வருகிறார். நவீன்குமார் அதில் நடிக்கும் சக நடிகையான ஹீமா பிந்துவை காதலிப்பதாக வதந்திகள் பரவி வந்தது. ஆனால் நவீன் கண்மணியுடனான காதலை வெளிப்படையாக அறிவித்தார். அவர்களுக்கு தற்போது நிச்சயதார்த்தம் முடிந்துவிட்ட நிலையில் விரைவில் திருமணம் நடைபெற உள்ளது.