பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் | நான்கு நாட்களில் 300 கோடி வசூலைக் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' | ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! |
சின்னத்திரை பிரபலங்களான நவீன் குமார் - கண்மணி சேகரின் நிச்சயதார்த்த வைபவம் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. கலர்ஸ் தமிழின் 'இதயத்தை திருடாதே' சீரியலில் ஹீரோவாக நடித்து வருகிறார் நவீன் குமார். இவருக்கும் அதே தொடரில் ஹீரோயினாக நடித்து வரும் ஹீமா பிந்துவுக்கு காதல் என இணையத்தில் அடிக்கடி கிசுகிசுக்கள் வெளி வந்தது. ஆனால், இருவரும் நாங்கள் நல்ல நண்பர்கள் என்றே சில நேர்காணல்களில் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், சமீபத்தில் நவீன் குமார் செய்தி வாசிப்பாளரான கண்மணி சேகரனை காதலிப்பதாக அறிவித்தார். இதனையடுத்து இந்த காதல் ஜோடிகளின் கதை பலவாறாக இணையத்தில் பேசப்பட்டு வந்தது. தற்போது இவர்களது நிச்சயதார்த்தம் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. நவீன் மற்றும் கண்மணி என இருவருக்கும் ரசிகர்கள் அதிகம் என்பதால் இவர்களது நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. சக நட்சத்திரங்கள், ரசிகர்கள் என பலரும் இருவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.