சிக்ஸ் பேக் மூலம் என்னை நானே செதுக்கி கொண்டேன் : மகத் சொல்கிறார் | 5 கேரக்டர்கள், 6 ஆண்டு உழைப்பு : ஒருவரே வேலை செய்த ஒன்மேன் | தனுஷின் ஹிந்தி படத்தில் இரண்டு கிளைமாக்ஸ் : கீர்த்தி சனோன் தகவல் | சபரிமலை தங்க தகடு திருட்டு வழக்கில் ஜெயராமிடம் விசாரிக்க முடிவு | பிளாஷ்பேக்: பாண்டியராஜன் ஜோடியாக நடித்த பாலிவுட் நடிகை | பொங்கல் போட்டியில் 2 படங்கள் மட்டுமா? | தாஷமக்கான் தலைப்புக்கு என்ன அர்த்தம் | பிளாஷ்பேக்: வரதட்சணை கொடுமைக்கு எதிரான முதல் படம் | ‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! |

பிரபல சீரியல் நடிகர் நவீன் குமாருக்கும், செய்திவாசிப்பாளர் கண்மணி சேகருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. சோஷியல் மீடியாவில் இருவருக்குமே அதிக பாலோயர்கள் இருப்பதால் இவர்கள் வெளியிடும் அப்டேட்டுகள் விரைவிலேயே வைரலாகி வருகின்றன.
இந்நிலையில், தனது வருங்கால மனைவியுடன் பழனி முருகன் கோவிலுக்கு சென்றுள்ள நவீன் குமார் அங்கே காவடி தூக்கி நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளார். அங்கே இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படம் மற்றும் வீடியோக்களை நவீன் வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் இதை பார்த்துவிட்டு 'எப்போது திருமணம். சீக்கிரம் அடுத்த அப்டேட் விடுங்க' என கேட்டு வருகின்றனர்.
நவீன் குமார் கலர்ஸ் டிவியின் 'இதயத்தை திருடாதே' சீரியலில் ஹீரோவாக நடித்து வருகிறார். நவீன்குமார் அதில் நடிக்கும் சக நடிகையான ஹீமா பிந்துவை காதலிப்பதாக வதந்திகள் பரவி வந்தது. ஆனால் நவீன் கண்மணியுடனான காதலை வெளிப்படையாக அறிவித்தார். அவர்களுக்கு தற்போது நிச்சயதார்த்தம் முடிந்துவிட்ட நிலையில் விரைவில் திருமணம் நடைபெற உள்ளது.




