ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் | விஜய் மில்டன் படத்தில் சுனில் | 'முத்த மழை' சர்ச்சை பற்றி எதுவும் பேசாத தீ |
சின்னத்திரை பிரபலங்களான நவீன் குமார் - கண்மணி சேகரின் நிச்சயதார்த்த வைபவம் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. கலர்ஸ் தமிழின் 'இதயத்தை திருடாதே' சீரியலில் ஹீரோவாக நடித்து வருகிறார் நவீன் குமார். இவருக்கும் அதே தொடரில் ஹீரோயினாக நடித்து வரும் ஹீமா பிந்துவுக்கு காதல் என இணையத்தில் அடிக்கடி கிசுகிசுக்கள் வெளி வந்தது. ஆனால், இருவரும் நாங்கள் நல்ல நண்பர்கள் என்றே சில நேர்காணல்களில் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், சமீபத்தில் நவீன் குமார் செய்தி வாசிப்பாளரான கண்மணி சேகரனை காதலிப்பதாக அறிவித்தார். இதனையடுத்து இந்த காதல் ஜோடிகளின் கதை பலவாறாக இணையத்தில் பேசப்பட்டு வந்தது. தற்போது இவர்களது நிச்சயதார்த்தம் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. நவீன் மற்றும் கண்மணி என இருவருக்கும் ரசிகர்கள் அதிகம் என்பதால் இவர்களது நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. சக நட்சத்திரங்கள், ரசிகர்கள் என பலரும் இருவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.